(என்.வீ.ஏ.)
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை டி.வை. பட்டில் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 7 விக்கெட்களால் இலகுவாக வெற்றிபெற்றது.
இந்த வெற்றியுடன் தனது 6 போட்டிகளில் 4ஆவது வெற்றியை ஈட்டிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 8 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் 4ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
உம்ரன் மாலிக், புவ்ணேஷ்வர் குமார் ஆகியோரின் மிகவும் துல்லியமான பந்துவீச்சுகளும், அபிஷேக் ஷர்மா, ராகுல் த்ரிபாதி, ஏய்டன் மார்க்ராம், நிக்கலஸ் பூரன் ஆகியோரின் பொறுப்பான துடுப்பாட்டங்களும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் வெற்றியை இலகுவாக்கின.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பஞ்சாப் கிங்ஸ், 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 151 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
புவ்ணேஷ்வர் குமார், உம்ரன் மாலிக் ஆகியோரின் பந்துவீச்சுகளை எதிர்கொள்வதில் பஞ்சாப் கிங்ஸ் அணி பெரும் சிரமத்தை எதிர்கொண்டது. அவ்வணியின் துடுப்பாட்டக்காரர்களில் இருவர் மாத்திரமே 25 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். வேறு எவரும் 15 ஓட்டங்களைக் கூட எட்டவில்லை.
ஒரு புறத்தில் விக்கெட்கள் சரிந்துகொண்டிருக்க, லியாம் லிவிங்ஸ்டன் மாத்திரம் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 33 பந்துகளில் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 60 ஓட்டங்களைக் குவித்து அணிக்கு உற்சாகத்தை ஊட்டினார். அவருக்கு அடுத்ததாக ஷாருக் கான் இரண்டாவது அதிகப்பட்சமாக 26 ஓட்டங்களைப் பெற்றார்.
லிவிங்ஸ்டன், ஷாருக் கான் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 61 ஓட்டங்களே அணியை ஓரளவு பலமான நிலைக்கு இட்டுச்சென்றது.
ஷிக்கர் தவான் (8), ப்ரப்சிம்ரன் சிங் (14), ஜொனி பெயார்ஸ்டோவ் (12), ஜிட்டேஷ் ஷர்மா (11) ஓடின் ஸ்மித் (13) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியமை அணிக்கு தாக்கத்தைக் கொடுத்தது.
கடைசி நான்கு வீரர்கள் ஓட்டம் பெறாததுடன் உம்ரன் மாலிக்கின் கடைசி ஓவரில் ஒரு ரன் அவுட் உட்பட 4 விக்கெட்கள் வீழ்ந்தமை விசேட அம்சமாகும்.
பந்துவீச்சில் உம்ரன் மாலிக் ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 4 ஓவர்களில் 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். புவ்ணேஷ்வர் குமார் 4 ஓவர்கள் வீசி 22 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
152 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 18.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது.
இந்தப் போட்டியிலும் துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் பிரகாசிக்கத் தவறி 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். (14 - 1 விக்.)
ஆனால், மற்றைய 4 துடுப்பாட்ட வீரர்கள் 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்று அணியின் வெற்றியை இலகுவாக்கினர்.
அபிஷேக் ஷர்மா (31), ராகுல் த்ரிபாதி (34) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அவர்கள் இருவரும் 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய ஏய்டன் மார்க்ராம், நிக்கலஸ் பூரன் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை வெற்றிபெறச் செய்தனர்.
மார்க்ராம் 27 பந்தகளில் 41 ஓட்டங்களுடனும் நிக்கலஸ் பூரன் 35 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பஞ்சாப் பந்துவீச்சில் ராகுல் சஹார் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM