(என்.வீ.ஏ.)
மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிராக மும்பை ப்ரேபோர்ன் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (16) நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்த லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் 18 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
கே. எல். ராகுல் குவித்த ஆட்டமிழக்காத சதம், ஆவேஷ் கானின் 3 விக்கெட் குவியல் என்பன லக்னோவின் வெற்றியில் பிரதான பங்காற்றின.
மறுபுறத்தில் மோசமான களத்தடுப்பு, துல்லியமற்ற பந்துவீச்சு என்பன மும்பை இண்டியன்ஸுக்கு 6ஆவது தொடர்ச்சியான தோல்வியைக் கொடுத்தது.
இந்த வருட ஐபிஎல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் மாத்திரமே இதுவரை ஒரு போட்டியில் தானும் வெற்றி அடையாமல் இருக்கிறது.
சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 199 ஓட்டங்களைக் குவித்தது.
ஆரம்ப வீரர் கே.எல். ராகுல் 20 ஓவர்களும் தாக்குப்பிடித்து 103 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
60 பந்துகளை எதிர்கொண்ட அவர், 9 பவுண்டறிகளையும் 5 சிக்ஸ்களையும் விளாசியிருந்தார்.
இதனிடையே 25 ஓட்டங்களைப் பெற்ற குவின்டன் டி கொக்குடன் ஆரம்ப விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்த ராகுல், 38 ஓட்டங்களைப் பெற்ற மனிஷ் பாண்டேயுடன் 2ஆவது விக்கெட்டில் மேலும் 72 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
மார்க்ஸ் ஸ்டொய்னி 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து தன்னுடன் 4ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த திப்பக் ஹூடாவுடன் மேலும் 43 ஓட்டங்களை ராகுல் பகிர்ந்தார்.
ஹூடா 15 ஓட்டங்களைப் பெற்றார்.
மும்பை பந்துவீச்சில் ஜெய்தேவ் உனத்கட் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பதிலக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 181 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
இஷான் கிஷான் (13), அணித் தலைவர் ரோஹித் ஷர்மா (6) ஆகிய இருவரும் மீண்டும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியமை மும்பை இண்டியன்ஸுக்கு பெரும் சிக்கலைத் தோற்றுவித்தது.
இளம் அதிரடி வீரர் டிவோல்ட் ப்றெவிஸ் (13 பந்துகளில் 31), சூரியகுமார் யாதவ் (27 பந்துகளில் 37) ஆகிய இருவரும் அணியைக் கட்டி எழுப்ப எடுத்த முயற்சி கைகூடாமல் போனது.
இவர்கள் இருவரைவிட திலக் வர்மா (26), கீரன் பொலார்ட் (25), ஜெய்தேவ் உனத்கட் (14) ஆகியோரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்ற மற்றைய துடுப்பாட்ட வீரர்களாவர்.
லக்னோ பந்துவீச்சில் ஆவேஷ் கான் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெடகளைக் கைப்பற்றினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM