தமிழகத்திற்குள் அத்துமீறி நுழைந்த இரு இலங்கையர்கள் கைது !

16 Apr, 2022 | 09:31 PM
image

பட்டுக்கோட்டை கடல் பகுதியில், உரிய அனுமதியின்றி அத்துமீறி நுழைந்த இலங்கையை சேர்ந்த இரண்டு இளைஞர்களை கைது செய்த கியூ பிரிவு பொலிசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கீழத்தோட்டம் கடல் பகுதியில், இலங்கை பதிவு எண் கொண்ட படகு ஒன்றும், அதில் இரண்டு இளைஞர்கள் இருப்பதையும் அந்தப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கண்டனர்.

இதுகுறித்து அதிராம்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, அந்த இடத்திற்கு விரைந்து சென்ற கடலோர பாதுகாப்பு குழும பொலிசார் மற்றும் கியூ பிரிவு பொலிசார், அந்த படகையும் அதில் இருந்த இரண்டு இளைஞர்களையும் அதிராம்பட்டினம் கடலோரப் பாதுகாப்பு குழும காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து அவர்களிடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அந்த 2 இளைஞர்களும் இலங்கை மன்னார் மாவட்டம் பேசாலை பகுதியைச் சேர்ந்த சுதாகர் (26) மற்றும் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த ரோஷன் (30) எனவும், மீன்பிடிக்க வந்தபோது இயந்திரம் பழுதானதால் இரண்டு தினங்களாக கடலில் தத்தளித்த படகு இப்பகுதிக்கு வந்து சேர்ந்ததாகவும் தெரிவித்தனர்.

அவர்களிடம் எந்தவித அடையாள அட்டையும் இல்லாததால், உண்மையில் அவர்கள் மீன்பிடிக்க வந்தவர்கள் தானா..?, அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக இங்கு வந்தார்களா..?, அவர்களுக்கு இங்கு யாருடனாவது தொடர்பு உள்ளதா..? என்பது குறித்து கியூ பிரிவு பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47