காலி முகத்திடலில் வழிபாடு நடத்தப்படவுள்ளதா ? -  தெளிவுபடுத்துகிறார் அருட்தந்தை சிறில் காமினி

Published By: Digital Desk 5

15 Apr, 2022 | 11:40 AM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

காலி முகத்திடலில் கத்தோலிக்கத் திருச்சபையால் வழிபாடுகள் நடத்தப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளிவரும் தகவல்கள் உண்மையில்லை.

அவ்வாறு நடத்தப்படுவதற்கு இலங்கை கத்தோலிக்கத் திருச்சபையால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அருட் தந்தை  சிறில் காமினி குறிப்பிட்டார். 

கொழும்பு பேராயர் இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவரிடம் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அருட் தந்தை  சிறில் காமினி அடிகள்  மேற்படி தெரிவித்திருந்தார். 

இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

"காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டமானது மக்கள் தலைமையில் நடைபெறும் மக்கள் போராட்டமாகும். அதற்கான முழு ஆதரவையும் இலங்கை கத்தோலிக்க திருச்சபை வழங்குகிறது. 

என்றபோதிலும், அங்கு வழிபாடுகளை நடத்துவதற்கு  இலங்கை கத்தோலிக்கத் திருச்சபை நடவடிக்கைகள் எடுக்கவில்லை. 

காலி முகத்திடலில் கத்தோலிக்கத் திருச்சபையால் வழிபாடுகள் நடத்தப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளிவரும் தகவல்கள் உண்மையில்லை" என்றார்.

இவர்களின் போராட்டத்திற்கு கத்தோலிக்க திருச்சபை தலைமை வகிக்கின்றதா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு,

"காலி முகத்திடலில்  முன்னெடுக்கப்பட்டு வரும்  மக்கள் போராட்டத்திற்கு , மக்களே தலைமை ஏற்கின்றனர்.  எமது இலங்கை கத்தோலிக்க திருச்சபை இதற்கு தலைமை ஏற்கவில்லை.

இருப்பினும், நாம் தொடர்ந்தும் அவர்களுக்கு ஆதரவு வழங்குவோம். இது இன்றைய இளம் சமுதாயத்தினரால் முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டமாகும்"  என பதிலளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02