(எம்.எம்.சில்வெஸ்டர்)
காலி முகத்திடலில் கத்தோலிக்கத் திருச்சபையால் வழிபாடுகள் நடத்தப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளிவரும் தகவல்கள் உண்மையில்லை.
அவ்வாறு நடத்தப்படுவதற்கு இலங்கை கத்தோலிக்கத் திருச்சபையால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அருட் தந்தை சிறில் காமினி குறிப்பிட்டார்.
கொழும்பு பேராயர் இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவரிடம் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அருட் தந்தை சிறில் காமினி அடிகள் மேற்படி தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
"காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டமானது மக்கள் தலைமையில் நடைபெறும் மக்கள் போராட்டமாகும். அதற்கான முழு ஆதரவையும் இலங்கை கத்தோலிக்க திருச்சபை வழங்குகிறது.
என்றபோதிலும், அங்கு வழிபாடுகளை நடத்துவதற்கு இலங்கை கத்தோலிக்கத் திருச்சபை நடவடிக்கைகள் எடுக்கவில்லை.
காலி முகத்திடலில் கத்தோலிக்கத் திருச்சபையால் வழிபாடுகள் நடத்தப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளிவரும் தகவல்கள் உண்மையில்லை" என்றார்.
இவர்களின் போராட்டத்திற்கு கத்தோலிக்க திருச்சபை தலைமை வகிக்கின்றதா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு,
"காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் போராட்டத்திற்கு , மக்களே தலைமை ஏற்கின்றனர். எமது இலங்கை கத்தோலிக்க திருச்சபை இதற்கு தலைமை ஏற்கவில்லை.
இருப்பினும், நாம் தொடர்ந்தும் அவர்களுக்கு ஆதரவு வழங்குவோம். இது இன்றைய இளம் சமுதாயத்தினரால் முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டமாகும்" என பதிலளித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM