( எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் விவகரத்தில், தாக்குதலை தடுக்காமை தொடர்பில் விரல் நீட்டப்படும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால் சிறிசேன தொடர்பிலான பொலிஸ் நடவடிக்கைகள், உயர் நீதிமன்றில் நிலுவையில் உள்ள 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்களின் தீர்மானத்தை அடுத்து முன்னெடுக்கப்படும் என சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்ற, உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சமூகத்தில் நிலவும் பல கருத்துக்களுக்கு தெளிவினை வழங்குவதற்காக எனக் கூறி ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.
பாதுகாப்பு செயலர் கமல் குணரத்னவின் தலைமையில் நடந்த இந்த செய்தியாளர் சந்திப்பில், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலர் ஓய்வுபெற்ற ஜெனரல ஜகத் டயஸ், பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன டி அல்விஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
இதன்போது, தாக்குதல்களை தடுக்காமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக விசாரணைகள் இடம்பெறுகின்றனவா, அதன் தற்போதைய நிலைமை என்ன என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலலித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன
' முன்னாள் ஜனாதிபதி தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆரம்ப சந்தர்ப்பத்திலேயே சி.ஐ.டி.யினர் அவரிடம் வாக்கு மூலம் ஒன்றினையும் பதிந்துள்ளனர்.
எனினும் தற்போது, தாக்குதலை தடுக்காமை தொடர்பில் 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்டோரை பிரதிவாதிகளாக பெயரிட்டு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அவை குறித்த விசாரணைகள் நிலுவியில் உள்ளன். எனவே அந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்மானம் சிரேஷ்டமானது. அதனை அடிப்படையாக கொண்டு சி.ஐ.டி.யினர் முன்னாள் ஜனாதிபதி விடயத்தில் மேலதிக நடவடிக்கை தொடர்பில் தீர்மானிப்பர். ' என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM