மதுபானத்தால் வந்த வினை : நண்பன் குத்திக் கொலை: ஹொரணையில் சம்பவம்

13 Apr, 2022 | 09:43 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

 கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று ஹொரனை  பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.  

ஹிக்கடுவை - வெல்வத்த பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.  

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த குறித்த நபர், ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர்.

 இந்த நிலையில் இக்கொலை தொடர்பில்,  கொலையுண்ட நபரின் நண்பரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 கைதுசெய்யப்பட்டவர் 31 வயதான காலி பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் கூறினர்.

 குறித்த இருவரும் ஒன்றாக மதுபானம் அருந்தியுள்ள நிலையில், அப்போது ஏற்பட்ட கருத்து மோதலை அடுத்து இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸார் கூறினர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01