பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் மிக ஆபத்தான நிலைக்கு முழு நாடு தள்ளப்பட்டுள்ள நிலையில் மக்களின் சாதாரண வாழ்க்கை தரம் அசாதாரண முறையில் சவாலுக்கு உள்ளாகியுள்ளது என்றும் இந்த நெருக்கடியான சூழல் முடிவுற்று, வளமான அமைதியான நல்லிணக்கம் மற்றும் செழிப்பு நிறைந்த நாளாக இன்றைய நாள் பிறந்து கனவுகள் நனவாக தான் பிரார்த்திப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது விசேட புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் யுகத்தின் மாபெரும் கலாசார நிகழ்வாக கருதப்படும் சிங்கள, தமிழ் புத்தாண்டு அனைத்து இலங்கை பிரஜைகளுக்கு சுபீட்சமான புத்தாண்டாக அமைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டு மக்கள் நீண்ட காலமாக சிங்கள,தமிழ் புத்தாண்டை வெகு விமர்சையாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
இருப்பினும் கடந்த இரு வருடங்களுக்கு முன்பிருந்து நாட்டில் சிங்கள, தமிழ் புத்தாண்டு பிறந்தது பூமியின் குரலில் அல்ல.
மாறாக கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருங்கள் என்ற அறிவுறுத்தல்களின் குரலிலேயே பிறந்தது என்றும் செழிப்பு நிறைந்த பாடத்தை கற்றுத்தரும் சிறப்பான புத்தாண்டு இம்முறை குடிமக்களை சுத்தமான உணவை சமைக்கும் தயகத்திற்குள் தள்ளிவிட்டு பிறந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தன்னிறைவுப் பொருளாதார நாடாக இருந்த நாடு இன்று கண்ணீர் சிந்தும் தேசமாக மாறியுள்ளதுடன் முழு குடும்பமும் மகிழ்ச்சியாக, அமைதியாக மற்றும் நிம்மதியாகவும் புத்தாண்டை கொண்டாடும் வாய்ப்பையும் இழந்துள்ளது.
ஒருபுறம் மக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் அலைக்களிக்கப்படுவதுடன் மறுபுறத்தில் இளைய தலைமுறையினர் வீதிக்கு இறங்கி அரசாங்கத்திற்கு எதிராக தங்களுடைய எதிர்ப்புகளை வெளிப்படுத்துகின்றனர்.
நல்லதொரு எதிர்கால தலைமுறையினர் கனவை நனவாக்கும் நோக்கில் நாட்டு மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
மகத்தான தியாகங்களை செய்த மக்களை மீண்டும் தியாகம் செய்ய கூறுவதை விடுத்து நடைமுறையில் ஆட்சியாளர்கள் அந்த செயற்பாட்டை முன்னெடுப்பது மிக அவசியமானது என்றும் நெருக்கடியான சூழல் முடிவுற்று, வளமான அமைதியான நல்லிணக்கம் மற்றும் செழிப்பு நிறைந்த இன்றைய நாள் பிறந்து கனவுகள் நனவாக பிரார்த்திப்பதாகவும் அனைவருக்கும் வெற்றிகள் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM