(எம்.எம்.சில்வெஸ்டர்)
தியகம விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் நிலானி ரத்நாயக்க, கயந்திகா அபேரத்ன, சச்சினி பெரேரா ஆகிய மூவரும் புதிய தேசிய சாதனைகளை நிலை நாட்டினர்.
அடை மழை காரமணாக எஞ்சிய போட்டிகள் எதிர்வரும் 23 ஆம் திகதியன்று நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுநர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதில், பெண்களுக்கான 3000 மீற்றர் தடைத்தாண்டல் ஓட்டப் போட்டியில் நிலானி ரத்நாயக்க 9 நிமிடங்கள் 40.25 செக்கன்களில் நிறைவு செய்து, தனது சொந்த சாதனையை முறியடித்தார்.
இப்போட்டியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை முறையே நிதர்சனி மற்றும் உதயகுமாரி பிடித்தனர்.
பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் புதிய தேசிய சாதனை படைத்த கயந்திக்கா அபேரட்ண போட்டித் தூரத்தை 2 நிமிடங்கள் 01.44 செக்கன்களில் ஓடி முடித்திருந்தார்.
இப்போட்டியில் நிமாலி லியனாராச்சி இரண்டாம் இடத்தையும், தருஷி கருணாரட்ண மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
இப்போட்டியை 2 நிமிடங்கள் 04.40 செக்கன்களில் நிறைவு செய்த தருஷி கருணாரட்ண இலங்கையின் கனிஷ்ட சாதனையைப் படைத்தார்.
பெண்களுக்கான கோளூன்றி பாய்தலில் சச்சினி பெரேராவும், ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் ருசிரு சத்துரங்கவும் புதிய தேசிய சாதனையுடன் முதலிடம் படைத்தனர்.
பெண்களுக்கான கோளூன்றிப் பாய்தலில் 3.71 மீற்றர் உயரம் தாவிய சச்சினி பெரேரா புதிய தேசிய சாதனை படைத்தார்.
இதற்கு முன்னர் சச்சினி பெரேராவால் 3.70 மீற்றர் உயரத்தை தாவியிருந்தமையே தேசிய சாதனையாக இருந்தது.
இதேவேளை, பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த அமேஷா ஹெட்டியாராச்சி 56.89 செக்கன்களில் நிறைவு செய்து புதிய கனிஷ்ட சாதனையை படைத்தார்.
இப்போட்டியில் முதலிடத்தை நதீஷா ராமநாயக்க (53.73 செக்.) பெற்றதுடன், இரண்டாம் இடத்தை உத்தரா (54.96 செக்.) பெற்றிருந்தார்.
மேலும், பெண்களுக்கான நீளம் பாய்தலில் முதலிடம் பிடித்த சாரங்கி சில்வா 6.25 மீற்றர் தூரம் பாய்ந்திருந்தார்.
இது புதிய போட்டிச் சாதனையாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM