(எம்.மனோசித்ரா)
காலி மீன்பிடித்துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்களில் ஒருவர் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளார்.
கடப்பரப்பில் குறித்த மீனவர்கள் சென்ற படகு விபத்திற்குள்ளாகி கவிழ்ந்த போதே இவ்வாறு ஒருவர் காணாமல் போயுள்ளதோடு, ஏனைய நால்வரும் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த 7 ஆம் திகதி காலி மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக 'மதுஷான் 14' என்ற படகில் காலியில் இருந்து 40 கடல் மைல் (74 கி.மீ) தொலைவில் ஆழ்கடலில் இடம்பெற்ற விபத்தில் படகு கவிழ்ந்ததில் குறித்த மீனவர்கள் அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இதன்போது குறித்த கடற்பரப்பில் மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரிதொரு படகினால் 4 மீனவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். எவ்வாறிருப்பினும் ஒருவர் மாத்திரம் காணாமல் போயுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து கடற்படையினர் குறித்த கடற்பரப்பிற்கு விரைந்து காப்பற்றப்பட்ட 4 மீனவர்களையும் மீட்டு கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM