படகு கவிழ்ந்து மீனவர் மாயம் : நால்வர் மீட்பு

Published By: Digital Desk 3

11 Apr, 2022 | 02:20 PM
image

(எம்.மனோசித்ரா)

காலி மீன்பிடித்துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்களில் ஒருவர் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளார். 

கடப்பரப்பில் குறித்த மீனவர்கள் சென்ற படகு விபத்திற்குள்ளாகி கவிழ்ந்த போதே இவ்வாறு ஒருவர் காணாமல் போயுள்ளதோடு, ஏனைய நால்வரும் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த 7 ஆம் திகதி காலி மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக 'மதுஷான் 14' என்ற படகில் காலியில் இருந்து 40 கடல் மைல் (74 கி.மீ) தொலைவில் ஆழ்கடலில் இடம்பெற்ற விபத்தில் படகு கவிழ்ந்ததில் குறித்த மீனவர்கள் அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இதன்போது குறித்த கடற்பரப்பில் மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரிதொரு படகினால் 4 மீனவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். எவ்வாறிருப்பினும் ஒருவர் மாத்திரம் காணாமல் போயுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து கடற்படையினர் குறித்த கடற்பரப்பிற்கு விரைந்து காப்பற்றப்பட்ட 4 மீனவர்களையும் மீட்டு கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02