(எம்.மனோசித்ரா)
இலங்கையில் இடம்பெறும் சமீபத்திய அமைதியான போராட்டங்கள் மூலம் சுற்றுலா பயணிகள் அல்லது சுற்றுலா தலங்கள் இலக்கு வைக்கப்படவில்லை.
இலங்கைக்கு வருகை தரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் நாடு முழுவதும் சுதந்திரமாக பயணிக்க முடியும் என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வெள்ளிக்கிழமை (8) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
இலங்கை தொடர்பில் கடந்த 6 ஆம் திகதி அமெரிக்கா வெளியிட்டுள்ள பயண வழிகாட்டல்களை மீளாய்வு செய்வதில் கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட் தொற்றுடன் , கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் பயண எச்சரிக்கை மூன்றாம் மட்டத்தில் காணப்பட்டது. எனினும் இது அண்மையில் புதுப்பிக்கப்படவில்லை என்பதை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துக் கொள்கிறது.
அது தவிர உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் பயங்கரவாதம் தொடர்பான அறிவிப்பும் விடுக்கப்பட்டிருந்தது. அமெரிக்க பயண ஆலோசனையில் பயங்கரவாதம் பற்றிய குறிப்பு, பயங்கரவாதம் இருந்த அல்லது ஆபத்தில் இருக்கும் உலகில் உள்ள நாடுகள் குறித்த அமெரிக்க பயண ஆலோசனையின் நிலையான மொழியின் அடிப்படையிலானது, மேலும் இது இலங்கைக்கு மட்டும் உரித்தானதல்ல.
கொவிட் தொற்றின் பின்னர் சுற்றுலாத்துறை படிப்படியாக வளர்ச்சியடைந்து வருகின்ற நிலையில் , சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு உறுதியாக தெரிவித்துக் கொள்கிறது. இலங்கை தனது தாயகத்திற்கு வருகை தருபவர்களை தொடர்ந்து வரவேற்கிறது மற்றும் அனைவருக்கும் அதிகபட்ச பராமரிப்பு மற்றும் சேவைகளை வழங்க உறுதிபூண்டுள்ளது.
சமீபத்திய அமைதியான போராட்டங்கள் மூலம் சுற்றுலா பயணிகள் அல்லது சுற்றுலா தலங்கள் இலக்கு வைக்கப்படவில்லை. இலங்கைக்கு வருகை தரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் நாடு முழுவதும் சுதந்திரமாக பயணிக்க முடியும். அனைத்து சுற்றுலா தலங்களும் அவர்களுக்காக திறக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM