(ஆர்.யசி, இராஜதுரை ஹஷான்)
பொருளாதார நெருக்கடியினை வேண்டுமென்றே தீவிரப்படுத்தி நாட்டையும், நாட்டு மக்களையும் நெருக்கடிக்குள்ளாக்கிய தரப்பினருக்கு பாராளுமன்ற மட்டத்தின் ஊடாக நிச்சயம் தண்டனை கொடுக்க வேண்டும்.
குறுகிய காலத்தில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டமை குறித்து ஆராய பாராளுமன்ற தெரிவு குழுவை ஸ்தாபித்தல் அவசியமாகும்.
அரச நிதி விவகாரத்தில் அரசாங்கமும் அமைச்சரவையும் முழுமையாக தோல்வியடைந்துள்ளதால் அரச நிதி தொடர்பான அதிகாரம் மீண்டும் பாராளுமன்றிற்கு பொறுப்பாக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் வலியுறுத்தினார்.
பராளுமன்றில் வெள்ளிக்கிழமை (9) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான விவாதத்தின் போது விசேட உரையாற்றுகையின் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றகையில் ,
பொருளாதார நெருக்கடி தற்போது அரசியல் நெருக்கடியாக தீவிரமடைந்து நாட்டின் ஸ்தீரத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. அரச நிதி விவகாரம் தொடர்பில் அரசாங்கமும், அமைச்சரவையும் தோல்வியடைந்துள்ளது. அரச நிதி விவகாரம் தொடர்பான அரமைப்பின் 148 ஆவது பிரிவிற்கமைய நிதி தொடர்பிலான அமைச்சரவையின் அதிகாரம் மீண்டும் பாராளுமன்றிற்கு கொண்டு வரப்பட வேண்டும்.
அரச நிதி தவறான தீர்மானங்களினால் பலவீனப்படுத்தப்பட்டுள்ளதை பல்வேறு காரணிகள் ஊடாக விளங்கிக்கொள்ள முடிகிறது.பொருளாதாரம் தொடர்பிலான அமைச்சரவையின் தவறான திட்டங்கள் பொருளாதார நெருக்கடியை வலுப்படுத்தியுள்ளது.
பொருளாதார நெருக்கடியை குறுகிய காலத்திற்குள் தீவிரப்படுத்தி நாட்டையும், நாட்டு மக்களையும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள தரப்பினருக்கு தண்டனை வழங்குவது அவசியமாகும். பொருளாதார நெருக்கடியை வேண்டுமென்றே தீவிரப்படுத்திய தரப்பினர் தொடர்பில் ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவை ஸ்தாபிப்பது அவசியமாகும்.
இலங்கையின் கடன் நிலைமை நிலைப்பேறான தன்மையில் இல்லை. பொருளாதார நெருக்கடி தீவிரமடைகிறது என சர்வதேச நாணய நிதியம் இடைக்கால அறிக்கை ஊடாக அறிவித்த போதும், அதனை பொருட்படுத்தாமல் செயற்பட்ட தரப்பினருக்கு எதிராகவும் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதை காலதாமதப்படுத்தியவர்கள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும்.
இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் தற்போது அத்தியாவசிய சேவைகள் கிடைப்பனவிற்கு ஒத்துழைப்பு கிடைக்கப்பெறுகிறது. இந்திய கடனுதவி திட்டம் கிடைக்கப்பெறாவிடின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன? நடைமுறையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறைக்கு தீர்வு காண வேண்டுமாயின் ஒரே தடவையில் நாட்டிற்கு 4 எண்ணெய் கப்பல்கள் வருகை தர வேண்டும்.
மறுபுறம் உணவு பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்க்கொள்ள முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சார்க் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிடம் நிவாரண அடிப்படையில் உணவு பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு அரசாங்கம் நல்லுறவின் அடிப்படையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும்.
எரிபொருள், எரிவாயு மற்றும் மின்விநியோக கட்டமைப்பில் காணப்படும் பிரச்சினைகள், அதிகரித்துள்ள வாழ்க்கை செலவுகள் மக்களின் பிரதான பிரச்சினையாக காணப்படுகிறது.
உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய நிதி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு உதவிகளை பெற்று மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு துரிதகரமான தீர்வு காணாவிடின் அரசியல்வாதிகள் சித்திரை புத்தாண்டுக்கு தங்களின் சொந்த இடங்களுக்கு கூட செல்ல முடியாத நிலைமை ஏற்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM