(இராஜதுரை ஹஷான்)
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி உட்பட பொருளாதார நிபுணர்கள் அடங்கிய பலதரப்பு விவகாரங்கள் மற்றும் கடன் நிலைபேற்றுத்தன்மை தொடர்பான ஆலோசனை குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளமை காலம் கடந்த தீர்மானமாக காணப்பட்டாலும் வரவேற்கத்தக்கது.
பொருளாதார மீட்சி தொடர்பிலான தீர்மானங்களில் முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகளுக்கு முரண்பாடற்ற தீர்வு காணலாம் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.
பலதரப்பு விவகாரங்கள் மற்றும் கடன் நிலைபேற்றுத்தன்மை தொடர்பான ஆலோசனை குழு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டின் பொருளாதாரம் தீவிரமடைந்ததை தொடர்ந்து அரசியல் நெருக்கடி தீவிரமடைவதற்கு முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தான் மூல காரணம் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது.
நாட்டு மக்கள் ஒன்று திரண்டு அரசாங்கத்தை கடுமையாக விமர்சிப்பதற்கும் அவர் மாத்திரம் பொறுப்புக்கூற வேண்டும்.
கொவிட் பெருந்தொற்று தாக்கத்தை காட்டிலும் அவர் பொருளாதார தாக்கத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.
பொருளாதார மீட்சி தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் கடந்த காலங்களில் முன்வைத்த யோசனைகளை முழுமையாக செயற்படுத்தியிருந்தால் பொருளாதார நெருக்கடியினை சமநிலைப்படுத்தியிருக்கலாம்.
பொருளாதார துறைசார் நிபுணர்கள் சுயமாகவே முன்வந்து பல திட்டங்களை அரசாங்கத்திடம் முன்வைத்தார்கள்.அவற்றை செயற்படுத்த நிதியமைச்சர் என்ற ரீதியில் பஷில் ராஜபக்ஷ இடமளிக்கவில்லை.
இந்திய கடனுதவி திட்டத்தை முழுமையாக நம்பியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கம் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து நிதியுதவியை வழங்கி வருகிறது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 2010 ஆம் ஆண்டு காலத்திற்கு பின்னரான அரசாங்கத்தை குறுகிய காலத்தில் பலவீனப்படுத்திய முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தையும் இரண்டு வருட காலத்திற்குள் இல்லாதொழித்து முழு நாட்டு மக்களையும் வீதிக்கிறக்கியுள்ளார்.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி உட்பட பொருளாதார நிபுணர்கள் அடங்கிய பலதரப்பு விவகாரங்கள் மற்றும் கடன் நிலைபேற்றுத்தன்மை தொடர்பான ஆலோசனை குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளமை காலம் கடந்த தீர்மானமாக காணப்பட்டாலும் வரவேற்கத்தக்கது.
பொருளாதார மீட்சி தொடர்பிலான தீர்மானங்கள் மற்றும் அவற்றை செயற்படுத்தல் ஆகியவற்றில் முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொள்ள முடியும்.
ஜனாதிபதி தொடர்ந்து பஷில் ராஜபக்ஷவின் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கினால் நாடு மென்மேலும் பாதிக்கப்பட்டு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கம் முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கு கிடையாது.
நாட்டு மக்கள் குறித்து அவர் அக்கறை கொண்டிருந்தால் பிரச்சினைகளை தீவிரப்படுத்தியிருக்கமாட்டார்.
பொருளாதார நெருக்கடியினால் மக்கள் எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு அவர் மாத்திரமே பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM