2020 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குள் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திக்கு 34 பில்லியன் ரூபா நிதியுதவியை இலங்கைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்துள்ளது.
ஜி.எஸ்.பி வரிசலுகையை மீளவும் பெற்றுக் கொள்வதற்காக பெல்ஜியம் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல தரப்பினருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டமையின் பிரதிபலனாக இந்த நிதியுதவி கிடைக்கப்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
2020 ம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குள் முன்னெடுக்கப்பட உள்ள நாட்டின் அபிவிருத்தி பணிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து 34 பில்லியன் ரூபா நிதியுதவியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்டத்தினர் உறுதியளித்துள்ளனர்.
கடந்த காலப்பகுதியை காட்டிலும் இரு மடங்கு நிதியுதவியை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்க உள்ளது. நிலையான சமாதானத்தை நிலைநாட்டல், இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றல், வறுமையினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்திக்கு உட்படுத்தல் போன்ற துறைகளின் அபிவிருத்திக்கு இந்த நிதியுதவியை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுக்க உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM