நாட்டில் தற்போது நிலவும் மின்சார நெருக்கடிக்கு எதிர்காலத்தில் தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் வகையில், மார்ல்போ (Marlbo) நிறுவனம் கடந்தவாரம் கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் விசேட தொழினுட்ப கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
நாட்டின் தொடரும் மின்நெருக்கடியை கருத்திற் கொண்டு, எரிசக்தித் துறைகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் நல்லெண்ணச் செயலாக இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சோலர் எனப்படும் சூரிய மின்உற்பத்தியை முன்னெடுப்பவர்களையும் அதில் ஆர்வம் உள்ளவர்களையும் இணைத்து முன்னெடுக்கப்பட்ட இந்த தொழினுட்ப கருத்தரங்கில் இலங்கை எரிசக்தி துறையின் 200க்கும் மேற்பட்ட பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கில், அமெரிக்காவின் Fluke Corporation நிறுவனத்தின் பிரதிநிதிகளும், இலங்கை மின்சார சபையின் கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தின் திட்டப் பணிப்பாளர் டாக்டர் எச்.எம். விஜேகோன் மற்றும் Fluke Corporation நிறுவனத்தின் உதவி முகாமையாளர் Mr. R. Girish ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மின்சார உபகரணங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் துறைசார் வர்த்தக நிறுவனமான மார்ல்போ டிரேடிங் கம்பனி 1989 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை மிகப் பெருமளவிலான வாடிக்கையாளர் தளத்துடன் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM