வவுனியா மின்சாரசபையின் ஊழியர்கள் இன்று அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று (06.04) பிற்பகல் 12 மணிக்கு வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள பிரதம மின் பொறியிலாளர் அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த குறித்த ஆர்ப்பாட்டமானது அங்கிருந்து பூங்கா வீதியூடாக புகையிரதநிலைய வீதியை அடைந்து, அங்கிருந்து மணிக்கூட்டுகோபுர சந்தியை சென்றடைந்தது.
மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து ஏ9 வீதியில் தடை ஏற்படுத்தியதுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் பழைய பேரூந்து நிலையத்தினை சென்றடைந்தமையால் ஏ9 வீதியில் சில மணி நேர போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது.
சுமார் 2 மணி நேரத்திற்கும் அதிகமாக இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் ஜனாதிபதிக்கு எதிரான கோசங்களை எழுப்பியிருந்ததுடன், எரிவாயு இன்மை, மின்சாரமின்மை, எரிபொருள் இன்மை, மின்சார வழங்கலை விற்பனை செய்யாதே போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தங்கியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM