(இராஜதுரை ஹஷான்)
மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை தடையின்றி வழங்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும்,வலுசக்தி அமைச்சும் இணக்கம் தெரிவித்துள்ளதால் எதிர்வரும் நாட்களில் மின்விநியோக தடையை ஒப்பீட்டளவில் மட்டுப்படுத்த எதிர்பார்த்துள்ளோம் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை தடையின்றி வழங்க வலுசக்தி அமைச்சும்,பெற்றோலிய கூட்டுத்தாபனமும் இணக்கம் தெரிவித்துள்ளதால் இனி நீண்ட நேரம் மின்விநியோக தடையை அமுல்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது.
இன்றைய தினம் 6 மணித்தியாலங்கள் மின்விநியோக தடையை அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் 40000ஆயிரம் மெற்றிக்தொன் டீசல் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து அதன் ஒருதொகை மின்சார சபைக்கு விநியோகிக்கப்பட்டதால் இன்றைய தினம் 1 மணித்தியாலமும்,40 நிமிடமும் மின்விநியோக தடை அமுல்படுத்தப்பட்டது.
தேசிய மின்னுற்பத்தி மற்றும் விநியோக கட்டமைப்பில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு அரசாங்கத்திடம் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.எதிர்வரும் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் 12ஆயிரம் மெற்றிக்தொன் டீசலும்,6 மற்றும் 7ஆம் திகதிகளில் 2500 மெற்றிக்தொன் உராய்வு எண்ணெய் கிடைக்கப்பெறவுள்ளதால் இனிவரும் நாட்களில் நீண்ட நேர மின்விநியோக தடையை அமுல்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது.
மின்சாரத்தை இயலுமான அளவு சேமிப்பதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான பரிந்துரைகளை சகல உள்ளுராட்சிமன்றங்களிலும் முன்வைத்துள்ளோம். மின்பாவனையாளர்கள் இயலுமான அளவு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM