தமிழகத்தின் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் சட்டவிரோதமாக மறைத்து வைத்திருந்த தடை செய்யப்பட்ட 300 கிலோ கடல் அட்டைகளை மெரைன் பொலிஸார் இன்று (3) காலை பறிமுதல் செய்துள்ளனர்.
இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை மீனவர்கள் பிடிப்பதாக மெரைன் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து இன்று (3) அதிகாலை கடற்கரையோரத்தில் இராமேஸ்வரம் மெரைன் பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன் நிறுவனம் ஒன்றில் மெரைன் பொலிஸார் சோதனை செய்தபோது அங்கு சாக்கு பைகளில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் உயிருடன் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து மெரைன் பொலிஸார் உயிருடன் இருந்த சுமார் 300 கிலோ எடையுள்ள கடல் அட்டைகளையும் இச்சம்பவத்தில் தொடர்புடைய மூவரையும் தனுஷ்கோடி மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்திருந்ததா? என்ற கோணத்தில் தொடர்ந்து மெரைன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM