சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஐவர் கைது

02 Apr, 2022 | 11:17 AM
image

பேலியகொட பிரதேசத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சிகரெட்டுக்களுடன் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய பேலியகொடை - மீன் சந்தைக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் முறையே 30, 34, 35, 46 மற்றும் 48 வயதான கொழும்பு 8, வத்தளை, களுபோவில,  பேருவளை மற்றும் மக்கோன பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 3,990,000 சிகரெட்டுகள் மற்றும் போலி இலக்கத்தகடுகள் பொருத்தப்பட்ட இரண்டு லொறிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட ஐவரும் நேற்றைய தினம் புதுக்கடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். 

மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26