நாளை சுழற்சி முறையில் மின் துண்டிப்பு

Published By: Digital Desk 4

01 Apr, 2022 | 06:15 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாடு தழுவிய ரீதியின் நாளைய தினம் சுழற்சி முறையில் 08 மணித்தியாலங்களும், 30 நிமிடங்களும் மின்விநியோக தடை அமுல்படுத்தப்படும். மின்சார சபை முன்வைக்கும் கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டதை தொடர்ந்தே மின்விநியோக தடை அமுலுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு  அறிவித்துள்ளது.

நாட்டில் நாளை நீண்ட நேர மின் துண்டிப்பு | Virakesari.lk

மின்விநியோக தடை தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைக்கும் யோசனைகள் முழுமையாக பரிசீலனை செய்யப்பட்டதை தொடர்ந்து மின்விநியோக தடைக்கு அனுமதி வழங்கிறது. மின்விநியோக பிரச்சினைக்கு விரைவில் சிறந்த தீர்வை முன்னெடுக்குமாறு தொடர்ந்து அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருகிறோம் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டார்.

நாளைய தினம் 8 மணித்தியாலங்களும் ,30 நிமிடங்களும் நாடு தழுவிய ரீதியில் சுழற்சி முறையில் மின்விநியோக தடை அமுல்படுத்தப்படும்.அதற்கமைய ஆங்கில எழுத்தில் A தொடக்கம் F வரையிலான வலயங்களில் உள்ளடங்கும் பிரதேசங்களில் காலை 08 மணிமுதல் பகல் 12 மணிவரை 4 மணித்தியாலங்களும்,மாலை 4 மணிமுதல் இரவு 7மணி வரை  மணித்தியாலங்களும்,இரவு 9 மணிமுதல் இரவு 10.30 மணி வரை ஒன்றரை மணித்தியாலங்களும் மின்விநியோகம் தடை செய்யப்படும்.

அத்துடன் ஆங்கில எழுத்தில் G தொடக்கம் L வரையிலான வலயங்களில் உள்ளடங்கும் பிரதேசங்களில் பகல் 12 மணிமுதல் மாலை 4மணி வரை 4 மணித்தியாலங்களும், மாலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை 3 மணித்தியாலங்களும்,இரவு 10.30 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை ஒன்றரை மணித்தியாலங்களும் மின்விநியோக தடை அமுல்படுத்தப்படும்.

ஆங்கில எழுத்தில் P தொடக்கம் S வரையிலான வலயங்களில் உள்ளடங்கும் பிரதேசங்களில் காலை 8 மணிமுதல் பகல் 12 மணிவரை 4 மணித்தியாலங்களும்,மாலை 4 மணிமுதல் இரவு 7 மணிவரை 3 மணித்தியாலங்களும்,இரவு 9 மணிமுதல் இரவு 10.30- மணி வரை ஒன்றரை மணித்தியாலங்களும் மின்விநியோக தடை அமுல்படுத்தப்படும்.

அத்தடன் ஆங்கில எழுத்தில் T தொடக்கம் W வரையிலான வலயங்களில் உள்ளடங்கும் பிரதேசங்களில் இரவு 10.30 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையும், மின்விநியோக தடை அமுல்படுத்தப்படும் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13