விக்ரம் பிரபு நடிப்பில் தயாராகியிருக்கும் 'டாணாக்காரன்' ஏப்ரல் 8ஆம் திகதியன்று டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ' டாணாக்காரன்'. இதில் விக்ரம் பிரபு கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் மலையாள நடிகர் லால், எம். எஸ். பாஸ்கர், மதுசூதன் ராவ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.
பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் விக்ரம் பிரபுவின் 'டாணாக்காரன்' ஏப்ரல் 8ஆம் திகதியன்று டிஸ்னி ஹாட்ஸ்டார் எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் தமிழ் பேசுகையில், '' காவலர்களை பற்றி தமிழ் திரை உலகில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் கல்லூரியின் பின்னணியில் வித்தியாசமான திரைக்கதை அமைப்பில் வெளியாகும் முதல் படம் இது.
இதன் திரைக்கதையை தயாரிப்பாளர் பிரபு நன்றாக அவதானித்ததால் படைப்பாக உருவாகி இருக்கிறது.
இந்த படத்திற்கு பொருத்தமான படப்பிடிப்பு தளத்திற்காக தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களை பார்வையிட்டு இறுதியாக வேலூரில் உள்ள பாடசாலையின் மைதானத்தை தெரிவு செய்து படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம்.
படப்பிடிப்பின்போது அனைத்து நட்சத்திரங்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கி படப்பிடிப்பை நிறைவு செய்தனர்.
வித்தியாசமான திரைப்படத்திற்கு மக்கள் என்றென்றும் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.
'ஜெய்பீம்' படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்த எமக்கு பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார்.
விக்ரம் பிரபுவின் நடிப்பில் உருவான 'புலிகுத்தி பாண்டி' நேரடியாக தொலைக்காட்சிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
அதைத் தொடர்ந்து அவரது நடிப்பில் தயாராகியிருக்கும் 'டாணாக்காரன்' திரைப்படமும் பட மாளிகையில் வெளியாகாமல் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.
இதனால் நடிகர் விக்ரம் பிரபுவும், நடிகர் சூர்யாவை போல் தொடர்ந்து தன்னுடைய படங்களை டிஜிட்டல் தளத்திலேயே வெளியிட்டு வருவதால் அவரது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என திரையுலகினர் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM