(எம்.எப்.எம்.பஸீர்)
ஆட்டுப்பட்டித் தெரு, கன்னாரத் தெரு வில் தங்க நகை செய்யும் இடமொன்றில் இடம்பெற்ற சுமார் மூன்றரைக் கோடி ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகைக் கொள்ளையின் பிரதான சூத்திரதாரி செட்டி யார் தெரு தங்கநகை வர்த்தகர் ஒருவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேற்படி கொள்ளை தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு கடந்த சனியன்று நால்வரை கைது செய்த நிலையில் அவர்களிடம் முன்னெடுத்த விசாரணைகளிலேயே இந்த தகவல் தெரியவந்துள்ளது. எனினும் தற்போது குறித்த வர்த்தகர் நாட்டிலிருந்து தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
கோடீஸ்வர வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ள மேற்படி வர்த்தகர், கொள்ளையிடப்பட்ட தங்க நகை விற்பனை நிலைய உரிமையாளருடன் இருந்த வைராக்கியத்தில், அவரது நகை விற்பனையை வீழ்ச்சியடையச் செய்யும் நோக்கில் 6 இலட்சம் ரூபா ஒப்பந்த அடிப்படையில் இக்கொள்ளையை கொள்ளைக் குழுவொன்றுக்கு கையளித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் கேசரிக்கு தெரிவித்தன.
கொள்ளையிடப்பட்ட தங்க நகை விற்பனை நிலையத்தில், நகை தயாரிக்கும் பணியில் இருந்த ஏழு இந்தியர்களை நாட்டில் இருந்து விரட்டியடிப்பது, இத்திட்டத்தின் முதல் நோக்கமாக இருந்துள்ளதாகவும், அதனால் அவர்களது கடவுச் சீட்டுக்களைப் பெற்று தன்னிடம் தருமாறு ஒப்பந்தம் வழங்கியதாக கூறப்படும் கோடீச்வர வர்த்தகர் கொள்ளையர்களிடம் கூரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனாலேயே வெளிவிவகார அமைச்சின் மோசடி தடுப்புப் பிரிவைப் போன்று வேடமிட்டு இக்கொள்ளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைத் தகவல்கள் சுட்டிக்காட்டின.
எவ்வாறாயினும் இக்கொள்ளையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான ஆமி சம்பத் எனப்படும் கேகாலை பகுதியைச் சேர்ந்த இராணுவத்தின் விஷேட படைப் பிரிவின் வீரரையும் மேலும் மூவரையும் கைது செய்துள்ள பொலிஸார், கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்தின் உளவுப் பிரிவு பொறுப்பதிகாரியாக இருந்த உப பொலிஸ் பரிசோதகர் (எஸ்.ஐ.) உள்ளிட்ட மேலும் மூவரை தேடி வருகின்றனர். அம்மூவரும் ஒன்றாக இருப்பதாக சந்தேகிக்கும் பொலிசார் விசாரணைகளை தொடர்கின்ரனர்.
கடந்த மாதம் இந்த பாரிய கொள்ளையானது சனிக்கிழமை ஒன்றில் பிர்பகல் 2.30 மணியளவில் பதிவாகியிருந்தது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க, கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் நிஸாந்த டி சொய்ஸா ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் உதவி பொலிஸ் அத்தியட்சர் சந்திரதிலகவின் ஆலோசனைக்கு அமைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் டி சில்வா உள்ளிட்டோர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM