(ஏ.என்.ஐ)
தொற்றுநோயை புத்திசாலித்தனமான முறைகளால் இந்தியா கையாண்டதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்று பரவலால் நாடு நெருக்கடியை எதிர்கொண்டிருந்த போதிலும் முறையாக நிர்வாக கட்டமைப்பு மூலம் மாற்றியமைத்ததாகவும் குறிப்பிட்டார்.
டுபாயில் நடந்த உலக அரசு உச்சி மாநாட்டில் உரையாற்றிய போதே மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் இதனை தெரிவித்தார்.
இந்த நெருக்கடியை இந்தியா புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தியது.
இது வணிகம் பற்றிய அதன் சொந்த முன்னோக்கை கவனத்தில் கொள்ளப்பட்டதாகவே கருத வேண்டும்.
தொற்றுப்பரவலை எந்தளவு வேகமாக கட்டுப்படுத்துவதுடன் பொருளாதார பாதுகாப்பு குறித்தும் கூடிய கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
தொற்றுநோயைக் கையாளும் போது, ஆரம்ப காலத்தில் வாழ்வாதாரத்தின் மீது உயிர்களைக் காப்பாற்றுவதில் இந்தியா கூடுதல் கவனம் செலுத்தியது.
குறுகிய காலம் பாதிக்கப்பட்டோம். ஆனால் அதிலிருந்து மீளெழுவதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்திருந்தோம்.
உலகளவில் கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளை கவனத்தில் கொண்டு செயற்பட்டோம்.
மறுபுறம் தொற்றுநோயைச் சமாளிக்க நான்கு அல்லது ஐந்து மாதங்களில் திரவ மருத்துவ ஒக்ஸிஜனின் உற்பத்தியை 10 மடங்கு அதிகரிக்க முடிந்தது.
இவ்வாறு பல முனைகளில் செயற்பட்டு வெற்றிக் கண்டோம் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM