நாட்டு மக்கள் கடினமாக காலப்பகுதியில் பொறுமையுடனும், ஒத்துழைப்புடனும் செயற்பட்டதால் சவால்களை வெற்றிக்கொள்ள முடிந்தது.
30 வருடகால யுத்தம்,கொவிட் பெருந்தொற்று ஆகியவை அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள சவால்களை வெற்றிக்கொள்ள தாய் நாட்டிற்காக அனைவரும் ஒன்றுப்பட வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எரிபொருள் பாவனையை மட்டுப்படுத்தும் நோக்கில் பிரதமர் அலுவலகம் மற்றும் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் வீட்டில் இருந்து சேவையாற்றுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
பிரதமர் தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தப்பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நாடு முன்னொருபோதும் எதிர்க்கொள்ளாத சவால் நிலையினை தற்போது எதிர்க்கொண்டுள்ள வேளையில் எரிபொருள் பாவனையை மட்டுப்படுத்தும் வகையில் பிரதமர் அலுவலகம் மற்றும் வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகள் ஆகியோரை வீட்டில் இருந்து சேவையாற்றுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மின்விநியோக தடை அமுல்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் அந்த அதிகாரிகள் தங்களின் கடமைகளை இயலுமான வரை வினைத்திறனாக செயற்படுவார்கள். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள அசௌகரியங்களை அரசாங்கம் உணர்வுபூர்வமாக அறிந்துள்ள நிலையில் பிரச்சினைக்கு தீர்வு காணவும் அதிக அவதானம் செலுத்தியுள்ளது.
கடினமான காலப்பகுதியில் மக்கள் பொறுமையுடனும்,ஒத்துழைப்புடன் செயற்பட்டதால் 30வருடகால யுத்தத்தையும்,கொவிட் பெருந்தொற்று வைரஸ் தாக்கத்தையும் வெற்றிக்கொள்ள முடிந்தது.தற்போதைய சவால்களை வெற்றிக்கொள்ளவும் தாய் நாட்டிற்காக அனைவரும் ஒன்றினைய வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM