(எம்.மனோசித்ரா)
இலங்கையில் காணப்படும் டொலர் நெருக்கடியைக் கருத்திற் கொண்டு தடையின்றி மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு உதவுமாறு ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன உலக வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான பணிப்பாளர் லினே ஷர்பன் பென்ஸ் உள்ளிட்ட விசேட பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண இந்த கோரிக்கைகளை முன்வைத்தார்.
நாட்டில் காணப்படும் அந்நிய செலாவணி நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கையர்களுக்கு தேவையான மருந்துகளை தடையின்றி பெற்றுக் கொள்வதற்காக உலக வங்கி உதவ வேண்டும் என்று இராஜாங்க அமைச்சரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளித்த ஷர்பன் பென்ஸ் , அதற்கு இணக்கம் தெரிவித்தார்.
இலங்கையில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஷர்பன் பென்ஸ் இதன் போது பாராட்டுக்களை தெரிவித்தார்.
பைசர் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதில் உலக வங்கி இலங்கைக்கு வழங்கிய நிதி உதவிக்கும் இராஜாங்க அமைச்சர் இதன் போது நன்றி தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM