பாணந்துறை - பிங்வத்தையிலுள்ள ஹோட்டலொன்றின் கழிப்பறையில் சடலமாக மீட்க்கப்பட்ட பெண் தொடர்பில் பல்வேறு முக்கிய தகவல்கள் பல கிடைக்கப் பெற்றுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க பிரதேசத்தில் விடுதியொன்றில் (ஹாஸ்டலில்) வசித்து வந்த குறித்த பெண் , கடவத்தை பிரதேசத்திலுள்ள களியாட்ட விடுதியொன்றில் (கிளப்) வேலைக்கு சேர்ந்து ஒரு நாள் மாத்திரமே என்று கிளப் உரிமையாளர் ஊடாக தெரியவந்துள்ளதாகவும் குறித்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சடலமாக மீட்க்கப்பட்ட பெண் 26 வயதுடைய கனேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாய் ஆவார் என்பது தெரியவந்துள்ளது.
இப் பெண்ணின் மர்ம மரணம் தொடர்பில் கடந்த திங்களன்று ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன.
இந்த செய்திகளை அவதானித்த அப்பெண்ணின் நண்பன் ஒருவர் , பொலிஸ் நிலையத்தில் அவர் தொடர்பில் பல முக்கிய தகவல்களை வழங்கியுள்ளார்.
அதற்கமைய குறித்த பெண் பாணந்துறை - பிங்வத்தையிலுள்ள ஹோட்டலில் அறையொன்றில் தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் பாடலொன்றைப் பாடுவதைப் போன்ற டிக்-டொக் காணொளியொன்றை தனக்கு கையடக்க தொலைபேசியில் அனுப்பியதாக அவரது நண்பன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த காணொளியையும் அவர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட பெண் கடந்த 26 ஆம் திகதி ஹோட்டல் அறையிலுள்ள மின் விசிறியில் தூக்கில் தொங்கியதாக, இந்த கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் மற்றைய சந்தேகநபரிடமிருந்து அவ்வாறு எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்று குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
கைது செய்வதற்காக தேடப்பட்டு வரும் ஹோட்டல் முகாமையாளர் உள்ளிட்ட மூவரில் , ஹோட்டலுடன் எவ்வித தொடர்பும் அற்ற முகாமையாளரின் நண்பனான வெளியூர் நபரொருவரும் உள்ளடங்குகின்றார்.
குறித்த நபர் தொட்டலங்க பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தல் காரணமாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வருபவர் என்றும் பொலிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் ஹோட்டலுக்கு அருகிலுள்ள கடற்கரையில் குறித்த பெண்ணின் கைப்பை எரிக்கப்பட்டுள்ளதால் , அவர் தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM