மட்டக்களப்பில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுப்பட்ட 4 பேர் கைக்குண்டுடன் கைது

Published By: Digital Desk 3

31 Mar, 2022 | 02:19 PM
image

மட்டக்களப்பு  மொறக்கொட்டாஞ்சேனை, செங்கலடி, ஜயங்கேணி  பிரதேசங்களில்  கொள்ளை, வீடுடைப்பு மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 4  பேரை  இன்று வியாழக்கிழமை (31) கைது செய்துள்ளதாக மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார். 

குறித்த பகுதிகளில் இந்து குழுவால் பெரும் அச்சுறுத்தல் நிலவி வந்துள்ளதையடுத்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்கவின் வழிகாட்டலில் மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையில் பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டு தொடர்ந்து இரவு வேளைகளில் குறித்த பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இந்த குழுவினர் பதுங்கியிருந்த இடத்தை சம்பவதினமான இன்று காலை பொலிசார் முற்றுகையிட்டு 4 பேரை கைது செய்ததுடன் கைகுண்டு ஒன்றும் வாள் ஒன்றும் கோடரி ஒன்றும் 8 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருள் என்பவற்றை மீட்டுள்ளனர். 

இதில் கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா மற்றும் ஏறாவூர் ஜயங்கேணி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், இதில் ஜயங்கேணியைச் சேர்ந்த 24 வயதுடைய மற்றும் 26 வயதுடைய இருவருக்கு  கொள்ளை மற்றும் வீடுடைப்பு வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பாக 19 வழக்குகள் இருப்பதாகவும் அவர்களிடமிருந்து இருந்து கைக்குண்டு ஒன்றை மீட்டுள்ளதாகவும்  அவர் தெரிவித்தார்.

இதேவேளை இந்த பகுதியில் இவ்வாறு கொள்ளை மற்றும் வீடுடைப்பு வாள்வெட்டு சம்பவங்களில் இன்னும் ஒரு குழு இயங்கிவருவதாகவும் இவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பபட்டுவருவதாகவும் தெரிவித்த அவர் , இவ்வாறு பொதுமக்களை அச்சுறுத்தி வருருவபர்கள் மற்றும் சட்டவிரோத  செயற்பாடுகளில் ஈடுபட்டுவருபவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் பொதுமக்கள்  உடனடியாக மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவுக்கு தெரிவிக்குமாறு அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51