மட்டக்களப்பு மொறக்கொட்டாஞ்சேனை, செங்கலடி, ஜயங்கேணி பிரதேசங்களில் கொள்ளை, வீடுடைப்பு மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 4 பேரை இன்று வியாழக்கிழமை (31) கைது செய்துள்ளதாக மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.
குறித்த பகுதிகளில் இந்து குழுவால் பெரும் அச்சுறுத்தல் நிலவி வந்துள்ளதையடுத்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்கவின் வழிகாட்டலில் மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையில் பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டு தொடர்ந்து இரவு வேளைகளில் குறித்த பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இந்த குழுவினர் பதுங்கியிருந்த இடத்தை சம்பவதினமான இன்று காலை பொலிசார் முற்றுகையிட்டு 4 பேரை கைது செய்ததுடன் கைகுண்டு ஒன்றும் வாள் ஒன்றும் கோடரி ஒன்றும் 8 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருள் என்பவற்றை மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா மற்றும் ஏறாவூர் ஜயங்கேணி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், இதில் ஜயங்கேணியைச் சேர்ந்த 24 வயதுடைய மற்றும் 26 வயதுடைய இருவருக்கு கொள்ளை மற்றும் வீடுடைப்பு வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பாக 19 வழக்குகள் இருப்பதாகவும் அவர்களிடமிருந்து இருந்து கைக்குண்டு ஒன்றை மீட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இந்த பகுதியில் இவ்வாறு கொள்ளை மற்றும் வீடுடைப்பு வாள்வெட்டு சம்பவங்களில் இன்னும் ஒரு குழு இயங்கிவருவதாகவும் இவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பபட்டுவருவதாகவும் தெரிவித்த அவர் , இவ்வாறு பொதுமக்களை அச்சுறுத்தி வருருவபர்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுவருபவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவுக்கு தெரிவிக்குமாறு அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM