அரசாங்கத்துடன்  கள்ளத்தனமாக ஜே.வி.பி. இணைந்துள்ளது  : சோமவன்ச     

Published By: MD.Lucias

22 Dec, 2015 | 09:28 AM
image

மத்­தியில் அமைந்­துள்ள கூட்டு அர­சாங்­கத்தில் மக்கள் விடு­தலை முன்­னணி நேர­டி­யாக இணை­யா­விட்­டாலும் கள்­ளத்­த­ன­மாக இணைந்­து­கொண்­டுள்­ளது என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் முன்னாள் தலை­வரும் மக்கள் சேவை கட்­சியின் தலை­வ­ரு­மான சோம­வன்ச அம­ர­சிங்க தெரி­வித்தார்.

அனு­ரா­த­பு­ரத்தில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

தற்­போ­தைய அர­சாங்­கத்­துடன் மறை­முக தொடர்­பு­களை வைத்­தி­ருக்கும் மக்கள் விடு­தலை முன்­னணி வெளியில் அர­சாங்­கத்­துக்கு எதி­ரான கட்சி என இனம் காட்டும் வகையில் அர­சாங்­கத்­துக்கு எதி­ராகப் பேரணி செல்­கி­றது.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியில் இருந்து வெளி­யேறி மக்கள் சேவைக் கட்­சியை எதற்­காக ஆரம்­பித்­தீர்கள் என அதி­க­மா­ன­வர்கள் என்­னிடம் கேட்­கின்­றனர். மக்கள் விடு­தலை முன்­னணி இன்­றைக்கு 50 வரு­டங்­க­ளுக்கு முன் உரு­வாக்­கப்­பட்­ட­தாகும். 49ஆவது வருடம் கழிந்து சென்­று­கொண்­டி­ருக்கும் போது மக்கள் விடு­தலை முன்­னணி தடம்மாறி­யது. அதன் பய­ணப் பாதை பிழையாக மாறியது. அத­னால்தான் கட்­சியில் தொடர்ந்து இருக்­காமல் வெளி­யே­றி­விட்டேன். அவ்­வாறு இல்­லை­யென்றால் கடந்த சில தினங்­க­ளாக இடம்­பெற்ற சகல விட­யங்­க­ளுக்கும் நானும் பொறுப்புக் கூற­வேண்டி வந்­தி­ருக்கும்.

ரோஹண விஜே­வீர மக்கள் விடு­தலை முன்­ன­ணியை பொது மக்­களின் கட்­சி­யா­கவே கட்­டி­யெ­ழுப்­பினார். என்­றாலும் தற்­போ­தைய தலைவர் அதனை மறந்­துள்ளார். கட்­சியின் தற்­போ­தைய தலை­வர்கள் கறுப்பு சந்­தையின் கையா­ட்­க­ளா­கி­யுள்­ளனர். அவர்­களின் தேவைக்­கேற்ப செயற்­படும் பிரி­வி­னர்­க­ளா­கி­யுள்­ளனர். அத­னால்தான் கடந்த பொதுத் தேர்­தலில் மக்கள் விடு­தல முன்­ன­ணிக்கு மக்கள் வாக்­க­ளிக்­காமல் நிரா­க­ரித்­தனர்.

மேலும், இம்­முறை பொதுத் தேர்­தலின் பின்னர் கூட்டு அர­சாங்­க­மொன்று உரு­வா­னது. ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி இணைந்து அமைத்த இந்த கூட்டு அர­சாங்­கத்தில் மக்கள் விடு­தலை முன்­னணி மற்றும் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு வெளிப்­ப­டை­யாக இணை­யா­விட்­டாலும் கள்­ளத்­த­ன­மாக கூட்டுச் சேர்ந்­துள்­ளன. அனு­ர­கு­மா­ர­வுக்கு அதனை பொய் என்று சொல்ல முடி­யாது.

இவர்கள் பாரா­ளு­மன்­றத்­திற்குள் செயல்­படும் விதத்தில் அல்ல மறை­மு­க­மாக இணைந்தே செயல்­ப­டு­கின்­றனர். வெளியில் அரச எதிர்பு கட்சி போன்று அர­சாங்­கத்­துக்கு எதி­ராக பேர­ணி­களை நடத்தி மக்­களை ஏமாற்றி வரு­கின்­றனர்.

இப்­போது இந்த நாட்டை நிர்வகிப்பது கூட்டு அரசாங்கமல்ல. குழப்ப அரசாங்க மாகும். இந்த அரசில் குழப்பம் இல்லாத இடமில்லை.

அரசாங்கம் முழு நாட்டையும் குழப்பி வருகின்றது. தற்போது இந்த நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லை என்பதே உண் மையான நிலைமையாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58