யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்திற்கு பஸ் வண்டியில் கஞ்சாவை கடத்தி வந்து அதனை சந்திவெளி பகுதியில் உள்ள பற்றைகாட்டு பகுதியில் விற்பனைக்காக பொதி செய்து கொண்டிருந்த யாழ் பளை பிரதேசத்தைச் சேர்ந்த 4 பேரை 165 கிராம் கேரளா கஞ்சாவுடன் நேற்று 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணையடுத்து சம்பவ தினமான நேற்று மாலை குறித்த பற்றை காடு பகுதியை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
இதன் போது கேரளா கஞ்சாவை விற்பனைக்காக பொதி செய்து கொண்டிருந்த 4 பேரை 165 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் பளை இத்தாவில் பகுதியைச் சேர்ந்த 29,24,24,25 வயதுடையவர்கள் ஆவர்.
நால்வரும் கஞ்சாவை பொதி செய்யும் போது கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM