(எம்.மனோசித்ரா)
பாணந்துறை - பிங்வத்த பகுதியில் ஹோட்டலொன்றின் கழிப்பறை குழியிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்க்கப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பிங்வத்த பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு , அவரது சடலம் கழிப்பறையில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக குறித்த ஹோட்டல் முகாமையாளரால் நேற்றுமுன்தினம் பிங்வத்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் கடவத்தையிலுள்ள களியாட்ட விடுதியொன்றில் (கிளப்) தொழில்புரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் சடலமாக மீட்க்கப்பட்ட ஹோட்டல் ஊழியர்கள் சிலரால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அங்கு அழைக்கப்பட்டுள்ளதோடு, சடலத்தை கழிப்பறை குழிக்குள் மறைத்து வைத்திருந்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும் கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை. இது தொடர்பில் 28 மற்றும் 47 வயதுகளையுடைய பொரலஸ்கமுவ மற்றும் பிலியந்தலை பிரதேசங்களைச் சேர்ந்த இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிங்வத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM