மின் கட்டணங்கள், எரிவாயு விலைகள், எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது - அரசாங்கம்

29 Mar, 2022 | 09:08 PM
image

(எம்.மனோசித்ரா)

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு 5000 ரூபாய் விசேட கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இரு மாதங்களுக்கு இக்கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதே வேளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மீண்டும் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை தொடர்பில் வலு சக்தி அமைச்சர் காமினி லொகுகே ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது ,

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இரு மாதங்களுக்கு 5000 ரூபாய் விசேட கொடுப்பனவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இந்த கொடுப்பனவை பெறுவதற்கு சுமார் 31 இலட்சம் குடும்பங்கள் தகுதி பெறுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இந்த கொடுப்பனவை வழங்குவதற்கான நிதி அரசாங்கத்திடம் காணப்படுகிறது என்று தெரிவித்தார்.

நீர் மின் உற்பத்தி எதிர்பாராதளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. அதன் காணரமாகவே மின் துண்டிப்பினை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த வேண்டியேற்பட்டுள்ளது. 

அண்மையில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் விலையை அதிகரித்தமையால் மீண்டும் அதற்கான நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கவில்லை என்றும் அமைச்சர் காமினி லொகுகே இதன் போது சுட்டிக்காட்டினார்.

கடந்த புத்தாண்டின் போதும் , கொவிட் தொற்றினால் நாடு முடக்கப்பட்டிருந்த சந்தர்ப்பங்களிலும் இவ்வாறு நாட்டு மக்களுக்கு விசேட கொடுப்பனவுகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மின் கட்டணங்கள், எரிவாயு விலைகள் மற்றும் எரிபொருட்களின் விலைகள் தற்போதைக்கு அதிகரிக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் மின் கட்டணம் மற்றும் எரிவாயு விலைகளை அதிகரிப்பதற்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் நிதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04