(எம்.எம்.சில்வெஸ்டர்)
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்லும் மக்களின் போக்குவரத்து வசதிக்காக எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை அதிகளவான பஸ்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக, காலி, மாத்தறை, எம்பிலிப்பிட்டிய, மொனராகலை, பதுளை, ஹட்டன், கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களுக்கு செல்லும் பயணிகளின் தேவை அதிகமாக காணப்படுவதால், அவர்களுக்கு போக்குவரத்து வசதியை பூர்த்தி செய்யும் வகையில் பஸ்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிக்கிறது.
இதையடுத்து தங்களது ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் கொழும்புக்கு வருவதற்கான போக்குவரத்து சேவைகளை இரண்டாம் கட்ட போக்குவரத்து சேவையும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன்போது, பேருந்துகளுக்கான விசேட இயக்க அறையொன்று 24 மணி நேரமும் நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய போக்குவதரத்து ஆணைக்குழு தெரிவிக்கறது.
மேலும், பஸ் சேவைக்கான தேவை அதிகரித்தால் கொழும்பு பஸ்டியன் மாவத்தை பிரதான பஸ் நிலையத்தில் பஸ் உரிமையாளர்களுக்கு தற்காலிக பயணிகள் போக்குவரத்து சேவை அனுமதிப்பத்திரத்தை இலவசமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM