(நா.தனுஜா)
'பிம்ஸ்டெக்' என்று அழைக்கப்படும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் 5 ஆவது மாநாடு உறுப்புநாடுகளைச் சேர்ந்த உயரதிகாரிகளின் பங்கேற்புடன் திங்கட்கிழமை (28) கொழும்பில் ஆரம்பமானது.
இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், தாய்லாந்து மற்றும் மியன்மார் ஆகிய 7 வங்காள விரிகுடா நாடுகள் அங்கம்வகிக்கும் இந்த பிம்ஸ்டெக் அமைப்பின் மாநாடு 4 வருடங்களுக்கு ஒருமுறை அதன் உறுப்புநாடுகள் ஒவ்வொன்றிலும் நடாத்தப்படும்.
அதன்படி அவ்வமைப்பின் 5 ஆவது மாநாடு இம்முறை 'வலுவான பிராந்தியம், வளமான பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியமான மக்களை நோக்கிய நகர்வு' என்ற தொனிப்பொருளில் இன்றைய தினம் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.
மாநாட்டில் முதல்நாளான இன்று பிம்ஸ்டெக் அமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்புநாடுகளைச் சேர்ந்த உயரதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே மற்றும் பிம்ஸ்டெக் அமைப்பின் செயலாளர் நாயகம் ரென்சின் லெக்ஃபெ ஆகியோர் தலைமைதாங்கியதுடன் உறுப்புநாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஒவ்வொரு நாடுகளினதும் உயரதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.
பிம்ஸ்டெக் அமைப்பில் அங்கத்துவம்வகிக்கும் நாடுகளைச்சேர்ந்த உயரதிகாரிகளின் 22 ஆவது கூட்டத்தின் ஆரம்பத்தில் தொடக்கவுரை ஆற்றிய வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, இம்முறை பிம்ஸ்டெக் மாநாட்டை இலங்கையில் நடாத்துவதையிட்டுப் பெருமிதமடைவதாகத் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து ஏனைய உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளின் உரைகளும் இடம்பெறவிருந்தன. இருப்பினும் வெளிவிவகார செயலாளரின் உரையைப் பார்வையிடுவதற்கு மாத்திரமே ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியில் மாநாட்டின் இரண்டாம் நாளான நாளைய தினம் காலை 9.30 மணிக்கு உறுப்புநாடுகளின் அமைச்சுமட்டக்கூட்டம் நடைபெறவிருப்பதுடன் இதில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உரையாற்றுவார். அதனைத்தொடர்ந்து உறுப்புநாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் உரையாற்றுவர்.
வங்களா விரிகுடா நாடுகளின் கூட்டிணைவான இந்த பிம்ஸ்டெக் அமைப்பின் 4 ஆவது மாநாடு நேபாளத்தில் நடைபெற்றதுடன் 6 ஆவது மாநாடு தாய்லாந்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM