துப்பாக்கி, கைக்குண்டு,போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் கைது

Published By: Digital Desk 3

28 Mar, 2022 | 12:53 PM
image

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கட்டுநாயக்க பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க பொலிஸ்பிரிவுக்குட்பட்ட தெவமொட்டாவ பிரதேசத்தில் நீர்கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் குறித்தநபர்கள் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மினுவங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 22 மற்றும் 34 வயதான இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் சந்தேகநபர்களிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் 10கிராம் 100மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபர்களை விசாரணைக்குட்படுத்தியதில் அவர்கள் சர்வதேச அளவில் பல குழுக்களுடன் தொடர்புகளை பேணி வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44