வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கட்டுநாயக்க பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க பொலிஸ்பிரிவுக்குட்பட்ட தெவமொட்டாவ பிரதேசத்தில் நீர்கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் குறித்தநபர்கள் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மினுவங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 22 மற்றும் 34 வயதான இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் சந்தேகநபர்களிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் 10கிராம் 100மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சந்தேகநபர்களை விசாரணைக்குட்படுத்தியதில் அவர்கள் சர்வதேச அளவில் பல குழுக்களுடன் தொடர்புகளை பேணி வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM