(எம்.ஆர்.எம்.வசீம்)
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இன்னும் ஒருசில மாதங்களில் பல துறைகளில் தொழில் வாய்ப்புக்கள் இல்லாமல்போகும் அபாயம் இருக்கின்றது. அதனால் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நாட்டின் ஆட்சியை ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒப்படைக்கவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்கு அழுத்தம்கொடுக்கும் வகையில் வெள்ளிக்கிழமை நடத்திய சத்தியாக்கிர போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி இருக்கின்றது. அந்த நிலைமையில் இருந்து நாட்டை மீட்பதற்கு அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை.
இந்நிலையில் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்கே ஐக்கிய தேசிய கட்சி சத்தியாக்கிர போராட்டம் ஒன்றை வெள்ளிக்கிழமை நடத்தி இருந்தது.
எமது சத்தியாக்கிரக போராட்டம் மூலம் நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண தேசிய கொள்கை திட்டம் ஒன்றை விரைவாக அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கின்றோம். யார் அரசாங்கம் செய்தாலும் அனைத்து துறைகளுக்கும் பொதுவான தேசிய கொள்கை அமைத்து அதன் அடிப்படையில் ஆட்சி நடத்தவேண்டும்.
அதன் மூலமே தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும். அவ்வாறு இல்லாமல் ஒருபோதும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.
அத்துடன் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக பல துறைகளில் தொழில்வாய்ப்புக்கள் இல்லாமல்போகும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியுமான ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமாகும்.
அதனால் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை விரைவாக ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒப்படைக்காவிட்டால் பல துறைகளிலும் தொழில்களை இழக்கவேண்டிய நிலை ஏற்படும்.
அவ்வாறு தொழில் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கும் தொழில் துறைகளில் பத்திரிகை நிறுவனங்களும் அடங்கி இருக்கின்றன. அதனால் மக்கள் முகம் கொடுத்துக்கொண்டிருக்கும் கஷ்டம் தொடர்பில் அரசாங்கம் ஒரு துளியேனும் கண்டுகொள்வதில்லை. பிரச்சினைக்கு தீர்வுகாணவும் அரசாங்கத்துக்கு முடியாது.
அத்துடன் சர்வகட்சி மாநாட்டிலும் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டு அரசாங்கம் எடுக்கவேண்டிய வேலைத்திட்டங்களை தெளிவுபடுத்தி இருந்தார்.
ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் முற்படுமா என எமக்கு தெரியாது. அதனால் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப தேசிய கொள்கை திட்டம் ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கிலே சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தினோம்.
ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்துகொண்டிருந்தமை எமக்கு பாரிய வெற்றியாகும். இதில் கலந்துகொண்டிருந்த அனைவரும் நன்றி தெரிவிக்கின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM