கிரிக்கெட்டில் மைதான நடுவர் தீர்ப்பில் சந்தேகம் இருந்தால் 3ஆவது நடுவரிடம் முறையிடுவதற்காக டி.ஆர்.எஸ். முறை கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் இதே டி.ஆர்.எஸ். முடிவு ஹமில்டனில் நடைபெற்ற நியூஸிலாந்து – இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அணி 55 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸில் ஜயசுந்தர ஓட்டமேதும் பெறாத நிலையில் வெளியேறினார். இந்த விக்கெட்தான் பிரச்சினையை கிளப்பியுள்ளது.
நியூஸிலாந்து பந்துவீச்சாளர் பிரேஸ்வெல் 23ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரின் 4ஆவது பந்தில் கருணாரத்ன ஆட்டமிழந்தார். அடுத்து ஜயசுந்தர களம் இறங்கினார். இந்த ஓவரின் கடைசி பந்தை லெக் திசையில் வீசினார். இதை ஜயசுந்தர கிளான்ஸ் செய்ய முயன்றார். ஆனால், பந்து அவரது கையுறையை (Glove) உரசிச் சென்றதுபோல் சென்று விக்கெட் காப்பாளரிடம் சென்றது. இதற்கு நியூஸிலாந்து வீரர்கள் பிடியெடுப்புக்கான ஆட்டமிழப்பை கேட்டனர். ஆனால், மைதான நடுவர் பால் ரிபெல் மறுத்து விட்டார்.
ஆனால், ரிவியூ மூலம் 3ஆவது நடுவரிடம் முறையிட்டனர். அப்போது ஸ்னிக்கோ மீட்டர் மற்றும் ஹாட்ஸ்பாட் முறையில் ரிப்ளே செய்து பார்த்ததில் பந்து கையுறையில் பட்டு சென்றதாக தெரியவில்லை. ஆனால், 3ஆவது நடுவர் ரிச்சார்ட் கெட்டில்பொரோவ் டி.ஆர்.எஸ். முறையில் ஆட்டமிழப்பு என அறிவித்தார்.
இதனால் ஆதங்கம் அடைந்த இலங்கை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் சம்பக்க ராமநாயக்க டி.ஆர்.எஸ். முறையில் ஏகப்பட்ட தவறுகள் உள்ளன என்று கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM