முச்சக்கரவண்டி விபத்தில் சிறுமி பலி : மூவர் காயம்

26 Mar, 2022 | 12:56 PM
image

பதுளை பிரதேசத்தில் முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளானதில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

சனிக்கிழமை (26) பதுளை அம்பகஸ்தோவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடலிந்த பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பயணித்த குறித்த முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுமியொருவரே உயிரிழந்துள்ளார் .

இதேவேளை படுகாயமடைந்தவர்களில் ஒரு சிறுவன் உட்பட இரண்டு சிறுமிகள் அம்பகஸ்தோவ மற்றும் பரணகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அம்பகஸ்தோவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55