சிசிடிவில் பதிவான ஆவி : பீதியை கிளப்பும் காணொளி (Video)

Published By: Robert

18 Oct, 2016 | 12:19 PM
image

பல வாகனங்கள் மோதியும் எதுவும் ஆகாமல் ஒரு ஆவி உருவம் வீதியை கடந்து செல்லும் வீடியோ வெளியாகி பீதியை கிளப்பியுள்ளது.

பொதுவாக கடவுள் நம்பிக்கைப் போலத்தான் ஆவி, பேய் மற்றும் பிசாசு ஆகியவற்றின் மீது நம்பிக்கைக் கொண்டிருப்பது. அது அவர் அவர் நம்பிக்கையைப் பொறுத்தது.

ஆவி வீடியோக்கள் யூடியூப்பில் கொட்டிக் கிடக்கின்றன. சிலவற்றை பார்க்கும் போதே அது பொய்யாக ஜோடித்தது என்று நமக்கு தெரிந்து விடும். ஆனால், சில வீடியோக்கள் நிஜத்திற்கு அருகில் இருப்பது போல் தெரியும். அதுபோல் டில்லியில் உள்ள வீதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான ஒரு ஆவி உருவம் தொடர்பான வீடியோ இணையத்தில் உலா வருகிறது.

டில்லியில் உள்ள ஒரு வீதியில், அதிகாலை 2.11 மணி அளவில் ஒரு கறுப்பு உருவம் நடந்து செல்கிறது. அப்போது அந்த வீதி வழியாக செல்லும் ஒரு லொரி, அந்த உருவத்தின் மீது மோதுகிறது. ஆனால், அந்த உருவத்திற்கு எதும் ஆகவில்லை. அதன்பின்னும் அந்த உருவம் தொடர்ந்து நடக்கிறது. அதன்பின் 2 கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை அந்த உருவத்தின் மீது மோதி கடந்து செல்கிறது.

ஆனாலும், எதுவும் ஆகாமல் நடந்து செல்லும் அந்த உருவம் சட்டென மறைந்து விடுகிறது. அந்த சிசிடிவி வீடியோவில் திகதி 15.08.2016 என்று காட்டுகிறது. அதை, தற்போது யாரோ இணையத்தில் பதிவு செய்துள்ளார்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right