சவுதி அரேபியாவின் மிகப்பெரிய அரச எண்ணெய் நிறுவனமான அராம்கொவின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த தாக்குதலால் சவுதி அரேபியாவின் ஜுடா நகரில் அமைந்துள்ள எண்ணெய் கிடங்குகளில் பாரிய தீவிபத்து ஏற்பட்டது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட டிரோன் தாக்குதலால் இவ்வாறு எண்ணெய் கிடங்குகள் தீப்பற்றி எரிந்து வருகின்றன.
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, ஏமன் நாட்டில் அரசுப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் இடம்பெற்று வருகிறது.
இதில் ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து வருகிறது.
இந்த கூட்டுப்படையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் அங்கம் வகிக்கிறது. இதனால் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி தலைமையிலான கூட்டு படைகளுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.
இந்நிலையிலேயே, சவுதி அரேபியாவின் மிகப்பெரிய அரசு எண்ணெய் நிறுவனத்தின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதலை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM