நாட்டில் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 6 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என அதிகரித்து வரலாற்றில் முதல் தடவை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் மீது போர் ஆரம்பமானதிலிருந்து சர்வதேச பங்குச் சந்தை மீதான முதலீடு குறைவடைந்து தங்கம் மீதான முதலீடு அதிகரித்தது. இதனால் உலக சந்தையில் தங்கத்தின் விலை பெருமளவு உயர்வடைந்தது. எனினும் அதில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்து வருவதனால் தங்கம் மீதான விலையில் தாக்கம் செலுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 53 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக ஒரு இலட்சத்து 47 ஆயிரத்து 500 ரூபாயாக காணப்பட்டது.
தூய தங்கத்தின் விலை
24 கரட் தூய தங்கம் இன்று பவுண் ஒன்று ஒரு இலட்சத்து 67 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு வாரமாக 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு பவுண் ஒரு இலட்சத்து 61 ஆயிரம் ரூபாயாகக் காணப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM