நாட்டின் பல மாவட்டங்களிலும் எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றிற்கான தட்டுப்பாடு தொடர்ந்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் இவற்றிக்காக இன்றும் (25) மக்கள் பல மணிநேரமாக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
வவுனியா மாவட்டத்தின் பல எரிபொருள் நிலையங்களில் மண்ணெண்ணெய் நிறைவடைந்துள்ள போதிலும், மாவட்டத்தின் இரு எரிபொருள் மீள் நிரப்பு நிலையங்களில் ஒரு நபருக்கு 1000 ரூபாவிற்கு என்ற அடிப்படையில் மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்படுகின்றன. இதனையடுத்து குறித்த எரிபொருள் விற்பனை நிலையங்களின் முன்னால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
மேலும், எரிவாயு லிட்ரோ சிலிண்டரை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே வழங்கப்படுவதுடன், வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாகவுள்ள எரிவாயு விநியோக முகவரினால் இன்று (25) 40 டோக்கன்கள் வழங்கப்பட்டு அதிகாலை 4.30 மணி தொடக்கம் மக்கள் காத்திருந்து காலை 10.30 மணியளவில் எரிவாயுவினை பெற்றிருந்தனர்.
இதனால் அரச உத்தியோகத்தர்கள், மற்றும் நாளாந்த வேலைக்கு செல்வோர் என பலரும் நீண்ட நேரம் காத்து நின்று அவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதால் உரிய நேரங்களுக்கு வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM