தற்போது அமுலாக்கப்படும் ஆறரை மணித்தியால மின்வெட்டு எதிர்வரும் வாரத்தில் இருந்து 10 மணித்தியாலங்கள் வரை நீடிக்கப்படக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் மற்றும் நீர் என்பன பற்றாக்குறையாக உள்ளமையின் காரணமாக, மின்வெட்டு நேரங்கள் நீடிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றையதினம் கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் தேவையான மசகு எண்ணெய் இன்மையால் மூடப்பட்டது.
நாடளாவிய ரீதியில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அனல்மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளமையால் , கடந்த ஒரு மாத காலமாக சுழற்சி முறையில் ஆறரை மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இவ்வாறான நிலையில் கடந்த வாரம் இந்தியாவிடமிருந்து கடன் அடிப்படையில் நாட்டில் அனைத்து தேவைக்கும் எரிபொருள் தடையின்றி விநியோகிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது.
எனினும் மின்துண்டிப்பு தொடர்ந்தும் அமுலிலேயே காணப்படுகிறது. கடந்த இரு தினங்களாக எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் , அவற்றுக்கான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் வலு சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறிருப்பினும் மின்துண்டிப்பு தொடர்ந்தும் அமுலில் உள்ள நிலையில் , கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையமும் மூடப்பட்டுள்ளமையால் மக்கள் மேலும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையிலேயே மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் மற்றும் நீர் என்பன பற்றாக்குறையாக உள்ளமையின் காரணமாக, மின்வெட்டு நேரங்கள் நீடிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM