ரஷியாவின் கட்டுப்பாட்டிலுள்ள பெர்டியன்ஸ் நகருக்கு அண்மையில் தரித்து நின்ற ரஷ்யாவின் பிரமாண்டமான போர்க்கப்பலான ஓர்ஸ்க்கை, உக்ரைன் படைகள் நேற்று அழித்துள்ளன.
பெர்டியன்ஸ் நகரம் மரியுபோல் நகரில் இருந்து 70 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது. உக்ரேன் படைகளால் அழிக்கப்பட்டுள்ள ரஷ்ய போர்க்கப்பல் 20 டாங்கிகள், 45 கவச வாகனங்கள், 400 துருப்புகளை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும்.
இந்த கப்பல் அழிக்கப்பட்டதை உக்ரேன் துணை இராணுவ அமைச்சர் ஹன்னாமல்யார் உறுதிப்படுத்தியுள்ளார்.
உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒரு மாதம் கடந்துள்ளது.
உக்ரேனின் இராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் மேற்கொள்வதாக ரஷ்யா அறிவித்துவிட்டு, அடுக்குமாடி குடியிருப்புகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், பிரசவ வைத்தியசாலைகள் என தாக்குதல் நடவடிக்கைகளை விரிவுபடுத்தியது.
இதனால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
இதுவரை இடம்பெற்ற தாக்குதலில் உக்ரேனில் வைத்தியசாலைகள் உள்ளிட்ட 64 சுகாதார கட்டமைப்புகள் தாக்கப்பட்டுள்ளதுடன் சுகாதார துறையுடன் தொடர்புடைய 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த ஒரு மாத கால போரில் ரஷ்யப் படையினர் 15 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக நேட்டோ மதிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM