நாமல் உள்ளிட்ட நால்வருக்கு எதிரான வழக்கு : சட்ட மா அதிபரின் ஆலோசனைக்காக ஒத்திவைப்பு

Published By: Digital Desk 3

24 Mar, 2022 | 05:18 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

சுமார் 15 மில்லியன் ரூபாவை சட்ட விரோதமாக சம்பாதித்ததாக கூறி, கறுப்பு பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் , நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்  அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  

இவ்வழக்கு தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக இவ்வழக்கு இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டது. 

வியாழக்கிழமை (23) அந்த வழக்கு கொழும்பு பதில் பிரதான நீதிவான் சந்திம லியனகே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  இதன்போதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நேற்று ( 24) வழக்கு விசாரணைக்கு வந்த போது, நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சார்பில் மன்றில் ஆஜரான பொலிஸ் அதிகாரி, இந்த விவகாரத்தில் விசாரணை கோவை சட்ட மா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள  அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் இதுவரை ஆலோசனை கிடைக்கவில்லை எனவும்  தெரிவித்தார்.

வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது  அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேக நபர்கள் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினராக நாமல் ராஜபக்ஷ கடமையாற்றியபோது, சட்ட விரோதமாக உழைத்த 15 மில்லியன் ரூபா பணத்தை  என்.ஆர். கன்சல்டன்சி நிறுவனத்தில் முதலீடு செய்ததாகவும் அதனூடாக கறுப்பு பண சுத்திகரிப்பு  சட்டத்தின் கீழ்  குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாகவும்  நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவ்வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ,  சுதர்ஷன பண்டார,  நித்யா செனானி சமரநாயக்க,  சுஜானி போகொல்லாகம ஆகியோரே இவ்வழக்கின் சந்தேக நபர்களாவர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55