(எம்.எப்.எம்.பஸீர்)
சுமார் 15 மில்லியன் ரூபாவை சட்ட விரோதமாக சம்பாதித்ததாக கூறி, கறுப்பு பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் , நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக இவ்வழக்கு இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டது.
வியாழக்கிழமை (23) அந்த வழக்கு கொழும்பு பதில் பிரதான நீதிவான் சந்திம லியனகே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நேற்று ( 24) வழக்கு விசாரணைக்கு வந்த போது, நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சார்பில் மன்றில் ஆஜரான பொலிஸ் அதிகாரி, இந்த விவகாரத்தில் விசாரணை கோவை சட்ட மா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் இதுவரை ஆலோசனை கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேக நபர்கள் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினராக நாமல் ராஜபக்ஷ கடமையாற்றியபோது, சட்ட விரோதமாக உழைத்த 15 மில்லியன் ரூபா பணத்தை என்.ஆர். கன்சல்டன்சி நிறுவனத்தில் முதலீடு செய்ததாகவும் அதனூடாக கறுப்பு பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாகவும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவ்வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.
அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, சுதர்ஷன பண்டார, நித்யா செனானி சமரநாயக்க, சுஜானி போகொல்லாகம ஆகியோரே இவ்வழக்கின் சந்தேக நபர்களாவர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM