தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் ஒரு அங்கமான நீர்நிலை போட்டிகள் கொழும்பு சுகததாச உள்ளக நீச்சல் தடாக அரங்கில் இன்று ஆரம்பமாகவுள்ளன.
இலங்கையில் முதல்முறையாக நடத்தப்படுகின்ற இந்தப் போட்டிகளில் மொத்தம் 7 நாடுகள் பங்குபற்றுகின்றன.
இன்று மாலை 5 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக நீச்சல் தடாக அரங்கில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தலைமையில் ஆரம்பமாகவுள்ள தெற்காசிய நீர்நிலை விளையாட்டுப் போட்டிகளின் முதல் நாளில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான வோட்டர் போலோ போட்டி நடைபெறவுள்ளது.
அத்தோடு நீர்நிலை விளையாட்டுக்களுக்கே உரித்தான பல கண்கவர் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைத்தீவுகள், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் இதில் கலந்துகொள்கின்றன. இன்று ஆரம்பமாகும் இப்போட்டிகள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை கொழும்பு சுகததாச உள்ளக நீச்சல் தடாக அரங்கில் நடைபெறவுள்ளன.
எட்டாவது தெற்காசிய நாடான பூட்டான் இந்தப் போட்டிகளில் கலந்துகொள்ளாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சார்க் நீர்நிலை விளையாட்டுக்களை இலங்கையில் நடத்துவது குறித்து கருத்து வெளியிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, நீச்சல் விளையாட்டில் மாத்திரம் 38 வகையான போட்டிகள் நடத்தப்படுவதால், இது பதக்கம் ஒன்றினை பெறக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படும் விளையாட்டுக்களில் ஒன்றாகும். எனவே 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை கருத்தில் கொண்டு நாம் எமது நடவடிக்கைகளை முன்னெடுத்தால் வெற்றிகளைப் பெறுவதற்கு எமக்கு நல்ல சந்தர்ப்பம் உள்ளது என்றார்.
இந்தப் போட்டிகள் வெவ்வேறு வயது மட்டங்களில் இடம்பெறுவதுடன், மொத்தமாக 7 நாடுகளைச் சேர்ந்த 400 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் இலங்கை சார்பாக 160 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.
இதில் முக்கியமாக திறந்த வெளி நீச்சல் போட்டி (Open water swimming) ஒன்றும் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி கொழும்பு காலி முகத்திடல் கடலில் 15 கிலோ மீற்றர்தூரம் நீச்சல் போட்டியாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM