கப்ராலின் கருத்திற்கு அதிருப்தி வெளியிட்டார் ரணில் : மன்னிப்புக் கோரினார் ஜனாதிபதி 

Published By: Digital Desk 4

23 Mar, 2022 | 10:48 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பொருளாதார நெருக்கடிக்கு நல்லாட்சி அரசாங்கம் காரணம் என மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொருளாதார பாதிப்பிற்கு அனைத்து அரசாங்கமும் காரணம் என்று குறிப்பிடுவதாயின் விஜயன் காலத்தில் இருந்து குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டும். 

May be an image of 1 person, standing and indoor

அரசியல் நோக்கமில்லாத வகையில் தான் சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ளோம். என்பதை முதலில் தெளிவாக குறிப்பிட்டுக்கொள்ள வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அஜித் நிவார்ட் கப்ராலின் கருத்திற்கு அதிருப்தி வெளியிட்டார்.

அரசியல் காரணிகள் பற்றி பேசும் தருணம் இதுவல்ல. உண்மையான நோக்கில் சர்வகட்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநரது கருத்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கோருகிறேன் என ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் புதன்கிழமை இடம்பெற்ற சர்வகட்சி கூட்டத்தின் போது நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து தெளிவுப்படுத்துமாறு ஜனாதிபதி மத்திய வங்கி ஆளுநரிடம் வலியுறுத்தினார்.

கொவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் பொருளாதார தாக்கம் தீவிரமடைவதற்கு நல்லாட்சி அரசாங்கம் காரணம் என தரப்படுத்தல்கள் ஊடாக நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகளை எடுத்துரைத்தார்.பொருளாதார நெருக்கடி தீவிரமடைவதற்கு கடந்த அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் குற்றஞ்சாட்டினார்.

மத்திய வங்கியின் ஆளுநரது உரையாடல் முடிவடைந்ததை தொடர்ந்து கருத்து தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க திறந்த பொருளாதார கொள்கையினை அரசாங்கம் முறையாக செயற்படுத்தியுள்ளதா என்பதை முதலில் குறிப்பிடுங்கள்.

அரசியல் நோக்கமற்ற வகையில் சர்வகட்சி மாநாட்டில் கலந்துக்கொண்டுள்ளோம்.இவ்விடயத்தில் அரசியல் பேசுவதை முதலில் தவிர்த்துக்கொள்ளுங்கள்.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது.இவ்விடயத்தில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விளையாடுவது பொருத்தமற்றது.

கடந்த அரசாங்கத்தினால் தான் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளமை வருந்தத்தக்கது.அரசியல் பேசுவதற்காக இங்கு வரவில்லை.பொருளாதார நெருக்கடிக்கு இதுவரை ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கமும் பொறுப்பு கூற வேண்டுமாயின் விஜயன் காலத்தை பற்றியும் குறிப்பிட்டு குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டும்.

மத்திய வங்கி ஆளுநரின் கருத்தினை கடுமையாக விமர்சித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நோக்கி ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷஅரசியல் நோக்கிற்காக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்படவில்லை.மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்ட கருத்து ரணில் விக்ரமசிங்கவிற்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியிருக்குமாயின் அதற்கு மன்னிப்பு கோருகிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48