( ஏ.என்.ஐ )
தொற்றுநோய்க்கு மத்தியில் பல்வேறு நாடுகளுக்கு கொவிட் -19 தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் தனது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ளும் சீனாவின் முயற்சிகள், அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட பிற உலகளாவிய நாடுகளால் வழங்கப்பட்ட தடுப்பூசிகளுடன் ஒப்பிடுகையில் சீன தடுப்பூசிகளின் செயல்திறன் போதுமாதாக இருக்க வில்லை.
யுனிசெப் அமைப்பின் தகவல்கனின் பிரகாரம், 2021 ஆம் ஆண்டு நவம்பர் - டிசம்பர் வரையில் சீனாவின் மாதாந்திர தடுப்பூசி ஏற்றுமதி 50 சதவீதம் குறைந்துள்ளது, இதற்கு காரணம் தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்த பிரச்சினையாகும்.
சீன தடுப்பூசி இராஜதந்திரத்தின் முடிவுகளை மறுப்பதற்குப் பொறுப்பான பிற காரணிகளாக நன்கொடைகள் என்ற போர்வையில் விற்பனை, தைவான் மற்றும் ஹாங்காங் - சின்ஜியாங் தன்னாட்சிப் பிராந்தியத்தில் மனித உரிமைகள் பிரச்சினைகள் போன்ற முக்கியமான விஷயங்களும் காணப்பட்டன.
சீனாவின் உலகளாவிய தடுப்பூசி விநியோகங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை விற்பனை வடிவில் உள்ளன.
2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சீனா கிட்டத்தட்ட 1.3 பில்லியன் அளவிலான கொவிட்-19 தடுப்பூசிகளை, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
இருப்பினும், இந்த ஏற்றுமதிகளில் பெரும்பகுதி நன்கொடைகள் அல்ல, மாறாக வணிக விற்பனையாகும்.
ஏற்றுமதி செய்யப்பட்ட 1.3 பில்லியன் கொவிட்-19 டோஸ்களில், கடந்த பிப்ரவரி 14 வரை 1.69 பில்லியன் தடுப்பூசிகள் விற்பனை வடிவத்தில் இருந்தன.
அதே நேரத்தில் 184 மில்லியன் மட்டுமே நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. சீனா தனது உலகளாவிய பிம்பத்தை சரிசெய்து கொள்ள கொவிட் தடுப்பூசி இராஜதந்திரத்தை பயன்படுத்தியது. ஆனால் தற்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM