(எம்.எம்.சில்வெஸ்டர்)
உயர் செயல்திறன் பயிற்சியாளர்கள் பிரிவின் புதிய தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ருவன் கல்பகே நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயர் செயல்திறன் பயிற்சியாளர்களின் அனைத்து அதிகாரங்களும் பொறுப்புகளும் ருவன் கல்பகேவிடம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தற்போது தமிழ் யூனியன் விளையாட்டுக் கழகத்தின் தலைமைப் பயிற்சியாளராக உள்ள ருவன் கல்பகே, இலங்கை அணிக்காக 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளதுடன் 284 ஓட்டங்களை குவித்துள்ளார்.
மேலும், 86 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 73 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளதுடன், 844 ஓட்டங்களைப் பெற்று இலங்கையின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் விளையாடி காலப்பகுதிகளில் இவர் ஒரு சிறந்த களத்தடுப்பாளராக செயற்பட்டிருந்தார்.
இவர், இலங்கை, ஓமான் மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணிகளின் பயிற்றுநர் குழாத்தில் பல்வேறு பொறுப்புக்களை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM