(சதீஷ் கிருஷ்ணபிள்ளை)
சர்வதேச அரங்கில் மீண்டும் போர்க் குற்றம் பற்றிய குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன அதில் முதல் குற்றச்சாட்டு சுவாரஷ்யமாக அமெரிக்க ஜனாதிபதியிடம் இருந்து வந்திருக்கிறது.
உக்ரேனில் போரைக் கட்டவிழ்த்து விட்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை 'போர்க் குற்றவாளி' என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வர்ணித்துள்ளார்.
சமகால உலகில் போர்க்குற்றவாளி என்பது பாரதூரமான வார்த்தை. அதைப் போலத்தான் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றம், இனச்சுத்திகரிப்பு என்கின்ற வார்த்தைகளும் காணப்படுகின்றன.
உக்ரேனிய மண் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் 'சகலதும்' நிகழ்வதாக மேற்குலகம் குற்றஞ்சாட்டுகிறது இதற்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் பொறுப்புக்கூற வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது.
இந்தக் குற்றங்களை எவ்வாறு வரையறை செய்தல் என்பது தான் தற்போதுள்ள பிரச்சினையாகின்றது, ஏறத்தாழ எல்லா வகையான நெருக்கடிகளையும் வரையறை செய்யக்கூடியதாக ஐக்கிய நாடுகள் சாசனம் உள்ளது.
இந்தச் சாசனத்தின்படி பார்த்தால், உக்ரேனை ஆக்கிரமிப்பதன் மூலம் ரஷ்யா குற்றம் செய்திருக்கிறது.
அது ஆக்கிரமிப்புக் குற்றமாகும் அதனடிப்படையில், சர்வதேச நீதிமன்றம் விரைந்து செயற்பட்டு, உக்ரேனிய மண்ணில் முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவிற்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின் மூலம் சர்வதேச நீதிமன்றத்தின் நிலைப்பாடு தெளிவாகிறது.
புட்டின் போரை நாடியதன் மூலம் உலக சட்ட ஒழுங்கின் அடிப்படைகள் மீறப்பட்டிருக்கின்றன என்பது பரலான குற்றச்சாட்டென்றால், அந்தக் குற்றச்சாட்டு நியாயமானதே.
சர்வதேச சட்டத்தின் கீழ் எது குற்றமாக வரையறை செய்யப்படுகிறதோ, அதன் அடிப்படையில் ஆக்கிரமிப்புக் குற்றம் தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடிய சாத்தியம் உண்டு.
சர்வதேச நீதிமன்றத்தின் வழக்குத்தொடுனர் புட்டினுக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்க எது தேவையோ அதற்குரிய ஆதாரங்கள் உள்ளதாக மேலைத்தேய நாடுகள் சொல்கின்றன.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-03-20#page-8
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM