(என்.வீ.ஏ.)
நியூஸிலாந்தில் நடைபெற்று வரும் 8 நாடுகளுக்கு இடையிலான 12 ஆவது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தனது ஐந்தாவது தொடர்ச்சியான வெற்றியை ஈட்டிய அவுஸ்திரேலியா அரை இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு முதலாவது அணியாக தகுதிபெற்றது.
ஆக்லண்ட், ஈடன் பார்க் விளையாட்டரங்கில் சனிக்கிழமையன்று (19) கணிசமான மொத்த ஓட்டங்கள் குவிக்கப்பட்ட போட்டியில் இந்தியாவை 6 விக்கெட்களால் வெற்றிகொண்டதன் மூலம் அரை இறுதியில் விளையாடும் தகுதியை அவுஸ்திரேலியா பெற்றது.
யஸ்திகா பாட்டியா, அணித் தலைவி மிதாலி ராஜ், ஹார்மன்ப்பரீத் ஆகியோர் அரைச் சதங்கள் பெற்று இந்தியாவைப் பலப்படுத்தியபோதிலும் அவற்றை விஞ்சும் வகையில் அலிஸா ஹீலி, அணித் தலைவி மெக் லெனிங் ஆகியோர் அரைச் சதங்களைக் குவித்து அவுஸ்திரேலியாவை வெற்றிபெறச் செய்தனர்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 277 ஓட்டங்களைக் குவித்தது.
இதில் மிதாலி ராஜ் 68 ஓட்டங்களையும் யஸ்டிகா பாட்டியா 59 ஓட்டங்களையும் ஹார்மன்ப்ரீத் கோர் 57 ஓட்டங்களையும் பூஜா வஸ்த்ரேக்கார் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.
அவுஸ்திரேலிய பந்துவீச்சில் டார்சி ப்றவுண் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அலனா கிங் 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 50 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 280 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.
அவுஸ்திரேலியா சார்பாக மெக் லெனிங் 97 ஓட்டங்களையும் அலிசா ஹீலி 72 ஓட்டங்களையும் ரஷேல் ஹேய்ன்ஸ் 43 ஓட்டங்களையும் பெத் மூனி ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களையும் எலிஸ் பெரி 28 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்திய பந்துவீச்சில் பூஜா வஸ்த்ரேக்கார் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இந்தியாவை வெற்றி கொண்ட அவுஸ்திரேலியா 5 போட்டிகளில் 10 புள்ளிகளைப் பெற்ற அணிகள் நிலையில் தொடர்ந்தும் முதலிடத்தில் இருக்கின்றது.
இதேவேளை, 4 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் இரண்டாம் இடத்திலுள்ள தென் ஆபிரிக்காவுக்கு அரை இறுதி வாய்ப்பை பெறுவதற்கு இன்னும் ஒரே ஒரு வெற்றியே தேவைப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM