சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெறுவது தற்போதைய நிலைமையில் சிறந்தது - இலங்கை மத்திய வங்கி

Published By: Digital Desk 3

19 Mar, 2022 | 09:35 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நிதி நெருக்கடியினை முகாமைத்துவம் செய்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெறுவது தற்போதைய நிலைமையில் சிறந்ததாக அமையும் என வலியுறுத்தி அரசாங்கத்திடம் விசேட பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி தீர்மானித்துள்ளமை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணசர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வது அவசியமற்றது என ஆரம்பத்தில் குறிப்பிட்டதை ஏற்றுக்கொள்கிறேன்.

வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டுள்ள நிலைமையில் வெளிநாட்டு கையிருப்பினை தக்கவைத்துக் கொள்வதற்காக செயற்படுத்த வேண்டிய தீர்மானங்களை 6 மாத பொருளாதார மீட்சி திட்டத்தில் உள்ளடக்கி அதனை கொள்கை அடிப்படையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதமளவில் வெளியிட்டோம்.

பொருளாதார மீட்சி கொள்கை திட்டத்தினை முழுiமையாக செயற்படுத்தியிருந்தால் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்திக்காது.

பலதரப்பட்ட காரணிகளினால் கொள்கை திட்டத்தினை செயற்படுத்த முடியவில்லை.நடந்து முடிந்த விடயத்தை பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பதால் எவ்வித பயனும் தோற்றம் பெறாது.

தற்போதைய நெருக்கடியான நிலைமையில் மூன்றாம் தரப்பினரது அதாவது சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ளாவிடின் பொருளாதார நெருக்கடி நிலைமை மிகவும் தீவிரமடையும்.

நிதி நெருக்கடியினை முகாமைத்துவம் செய்ய நாணய நிதியத்தின் உதவியை நாடுவது சிறந்ததாக அமையும் என அரசாங்கத்திடம் பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31